செய்திகள் :

இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது: நடிகர் பிரகாஷ் ராஜ்

post image

தமிழகத்தில் திமுகவினரும் - பாஜகவினரும் கெட் அவுட் மோடி... கெட் அவுட் ஸ்டாலின்... என போட்டி போட்டு ட்ரெண்ட் ஆக்கி வரும் நிலையில், இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது ’கெட் அவுட் மோடி’ என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக தலைவர்களும், மாநில அரசுக்கு எதிராக பாஜக தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றால் ’கோ பேக் மோடி’ என்பதற்கு பதிலாக ’கெட் அவுட் மோடி’ எனத் துரத்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, திமுக ஊடக அணியினரின் ’கெட் அவுட் மோடி’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் டிரெண்டானது.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டை ரெண்டிங்கை தொடங்கி வைத்த 3 மணிநேரத்திற்குள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக 3 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் முதல்கட்ட பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும்: ஹனுமந்தராவ்

இந்த நிலையில், இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது ’கெட் அவுட் மோடி’ என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.

ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. ’கெட் அவுட் மோடி’ என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்... மேலும் பார்க்க

திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வ... மேலும் பார்க்க

வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!

இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்... மேலும் பார்க்க

மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பக... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க