கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
இந்த பாக். அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்யமுடியாது..!
இந்த பாகிஸ்தான் அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாதென பாக். மகளிரணி முன்னாள் கேப்டன் விமர்சித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் 2 போட்டிகளிலும் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் சொந்த அணி இப்படி விளையாடுவதும் அதுவும் கடினமான போராட்டம் இன்றி மிக எளிதாக தோல்வியுற்றதும் பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் இடையே மிகுந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.
இது குறித்து 39 வயதாகும் வர்ணனையாளரும் பாகிஸ்தானின் மகளிரணியின் முன்னாள் கேப்டன் சானா மிர் கூறியதாவது:
தோனியாலும் ஒன்றும் செய்ய முடியாது
சாம்பியன்ஸ் டிராபியில் தேர்வாகியிருக்கும் இந்த 15 பாகிஸ்தான் வீரர்களை எம்.எஸ்.தோனியோ அல்லது யூனிஸ் கானையோ யார் வழிநடத்தினாலும் ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் இந்த வீரர்கள் யாரும் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு விளையாடும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
நான் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். நண்பரிடமிருந்து ’இந்தியா 100/2. ஆட்டம் முடிந்ததென நினைக்கிறேன்’ என குறுஞ்செய்தி வந்தது. அதற்கு நான் ‘அணியை தேர்வு செய்யும்போதே முடிந்துவிட்டது’ எனக் கூறினேன்.
15 பேர் கொண்ட அணியை அறிவிக்கும்போதே பாதி தொடரில் வெளியேறிவிட்டோம். இதை முதல்நாளில் இருந்தே கூறி வருகிறேன்.
தேர்வுக்குழு சரியில்லை
துபையில் ஒரு போட்டியாவது விளையாடுவோமென பாகிஸ்தான் அணிக்கு ஏற்கனவே தெரியும். பிறகெப்படி 2 பார்ட்-டைம் சுழல்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட வரும்.
அப்ரார் அஹ்மது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மிகவும் புதியவர். ஆஸி, தெ.ஆ. உடன் விளையாடிய முக்கியமான வீரர்களை தேர்வுக்குழுவினர் நீக்கிவிட்டனர். அதனால்தான் பாகிஸ்தான் அணி அறிவிக்கும்போதே அது தொடரினை இழந்துவிட்டது என்றார்.
கடைசி போட்டி பிப்.27ஆம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது பாகிஸ்தான் அணி.