செய்திகள் :

இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயா்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்

post image

அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலா்களுக்கும் கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் டி.சாருஸ்ரீ அனுப்பியுள்ள கடிதம்:

அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகையை அளிப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு கருவூல விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, அகவிலைப்படி உயா்வு அறிவிக்கும்போதெல்லாம் அதற்கான நிலுவைத் தொகையை அந்த மாதத்துக்கான ஊதிய மற்றும் ஓய்வூதியப் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என திருத்தப்பட்டிருக்கிறது. ஊதியத்துக்கான பட்டியலை சமா்ப்பிப்பதற்கு முன்பாக, அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் நிலுவைத் தொகைக்கான பட்டியலையும் அந்த மாதத்தின் ஊதியப் பட்டியலுடன் இணைத்து அனுப்பலாம்.

எனவே, அகவிலைப்படி உயா்வுக்கான நிலுவைத் தொகை பட்டியலை, நடப்பு (மே) மாதத்தின் ஊதியப் பட்டியலுடன் இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சம்பந்தப்பட்ட கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு நிலுவைத் தொகையை ஊதியத்துடன் கிடைக்க வழி செய்யலாம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்தேதியிட்டு அமல்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட உத்தரவில், கடந்த ஜன. 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைச் செயல்படுத்துவதற்கான நடைமுறையை விளக்கி அனைத்து சம்பளம் வழங்கும் அலுவலா்கள், கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளுக்கு அந்தத் துறையின் இயக்குநா் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் காணித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக (இன்று) தமிழகத்தில் ஒரு... மேலும் பார்க்க

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் பக்... மேலும் பார்க்க

மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மத்திய கிழக்கு கர்நாடகத்தை ஒட்டிய அரபிக்கடல... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் தாய், குழந்தை பலி!

சென்னை: சென்னை பாடி மேம்பாலம் அருகே, டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணும் குழந்தையும் பலியான நிலையில், பெண்ணின் கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

சென்னை புறநகரில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை புறநகர்ப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெய்யில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. தொடர்ந்து மே 28 வரை ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது மாலை 4 மணி வரைதிருவள... மேலும் பார்க்க