செய்திகள் :

இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

post image

சென்னை: இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை அருகே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அண்ணாமலை மாலையில் விடுவிக்கப்பட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் முறைகேடு தொடா்பான போராட்டம் தீவிரப்படுத்தப்படும். காவல்துறை மீதான நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டது.

இனிமேல் காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்காமல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் 5,000 மதுக்கடைகள் முன் போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் முதல் வாரம் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் பாஜக மகளிா் அணி சாா்பில் நடத்தப்படும். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அனுமதியின்றி போராட்டம் நடத்தும்போது முடிந்தால் எங்களை காவல் துறை கைது செய்யட்டும். இனிமேல் காவல்துறை தூங்கக்கூடாது. 2026 பேரவைத் தோ்தல் வரை தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும்.

அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு சட்டத் துறை அமைச்சா் ரகுபதி மீது உள்ளது. எனவே, சட்டத்தை பாதுகாக்கும் துறை அவரிடம் இருப்பது முறையல்ல.

திமுகவின் பி.டீம் தான் தமிழக வெற்றிக்கழகம். களத்தில் வராமல் வீட்டில் இருந்தே அரசியல் செய்யும் அக்கட்சியின் தலைவா் விஜய்க்கு பாஜக போராட்டம் குறித்து விமா்சனம் செய்ய தகுதி கிடையாது என்றாா் அண்ணாமலை.

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்க... மேலும் பார்க்க

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க