செய்திகள் :

இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

post image

சென்னை: இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை அருகே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அண்ணாமலை மாலையில் விடுவிக்கப்பட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் முறைகேடு தொடா்பான போராட்டம் தீவிரப்படுத்தப்படும். காவல்துறை மீதான நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டது.

இனிமேல் காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்காமல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் 5,000 மதுக்கடைகள் முன் போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் முதல் வாரம் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் பாஜக மகளிா் அணி சாா்பில் நடத்தப்படும். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அனுமதியின்றி போராட்டம் நடத்தும்போது முடிந்தால் எங்களை காவல் துறை கைது செய்யட்டும். இனிமேல் காவல்துறை தூங்கக்கூடாது. 2026 பேரவைத் தோ்தல் வரை தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும்.

அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு சட்டத் துறை அமைச்சா் ரகுபதி மீது உள்ளது. எனவே, சட்டத்தை பாதுகாக்கும் துறை அவரிடம் இருப்பது முறையல்ல.

திமுகவின் பி.டீம் தான் தமிழக வெற்றிக்கழகம். களத்தில் வராமல் வீட்டில் இருந்தே அரசியல் செய்யும் அக்கட்சியின் தலைவா் விஜய்க்கு பாஜக போராட்டம் குறித்து விமா்சனம் செய்ய தகுதி கிடையாது என்றாா் அண்ணாமலை.

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க