செய்திகள் :

இன்றும் தங்கம் விலை உயர்ந்ததா? விலை நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் வார இறுதி நாளான சனிக்கிழமை காலை, ஆபரணத் தங்கம் விலை உயர்வுடன் வணிகமாகி வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை, சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.82,320-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கம் முதலே அதிக ஏற்றத்துடனும், அவ்வப்போது சில சிறு சிறு தொகைகள் இறக்கத்துடனும் வணிகமாகி வருகிறது.

இந்த வாரத்தில், புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும் விற்பனையானது.

ஆனால், இந்த நிலை நீடிக்கவில்லை. வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.10,230-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840-க்கும் விற்பனையான நிலையில் இன்றும் உயர்வைக் கண்டுள்ளது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 உயர்ந்து, ரூ.10,290க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ரூ.82,320 க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.145-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

வோடபோன் ஐடியா பங்குகள் 7% உயர்வு!

புதுதில்லி: நிறுவனத்தின் 2016-17 வரையிலான காலத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கையை ரத்து செய்யக் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மனுவை செப்டம்பர் 26 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன... மேலும் பார்க்க

பிளிப்கார்ட்டில் விற்பணைக்கு வரும் ராயல் என்ஃபீல்ட்!

புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து அதன் 350 சிசி போர்ட்ஃபோலியோவை விற்பனை செய்ய உள்ளதாக இன்று தெரிவித்தது. புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, க... மேலும் பார்க்க

சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.07% ஆக உயர்வு!

புதுதில்லி: விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் முறையே 0.77 மற்றும் 1.01 சதவிகிதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 1.07 மற்றும் 1.26 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தொழிலாள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அந்நிய செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ... மேலும் பார்க்க

மூன்று நாள் உயர்வுக்கு பிறகு, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

மும்பை: ப்ளூ-சிப் நிறுவனங்களான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப முன்பதிவை செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் இன்று 387 புள்ளிகள் சரிந்து, அதன் மூன... மேலும் பார்க்க

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

புது தில்லி: முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் எப்போதும் கூறி வந்ததை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி குழும தலைவர் கௌதம் அதானி தெரிவி... மேலும் பார்க்க