செய்திகள் :

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

post image

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்கள் இது போன்று வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இதற்கு ரவீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை ரவீனா கண்டுகொள்ளவில்லை. சில நேரங்களில் ரவீனா இதற்காக தனது கணவருடன் சண்டையும் போட்டுள்ளார். ரவீனாவிற்கு இன்ஸ்டாகிராமில் 34 ஆயிரம் பாலோயர்கள் இருக்கின்றனர். சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்த ரவீனாவின் கணவர் பிரவீன் திடீரென வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த போது ரவீனாவும், சுரேஷும் தனிமையில் இருப்பதை பார்த்த பிரவீன் தன் மனைவியிடம் இது தொடர்பாக சண்டையிட்டார். இச்சண்டை முற்றிய நிலையில் சுரேஷுடன் இணைந்து ரவீனா தன் கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார். குடும்பத்தினர் பிரவீன் எங்கே என்று ரவீனாவிடம் கேட்டதற்கு தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.

இது குறித்து பிரவீன் உறவினர்கள் போலீஸில் புகார் செய்திருந்தனர். போலீஸார் விசாரித்து வந்தனர். தற்போது பிரவீன் உடல் அவரது வீட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ரவீனா வீட்டில் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் புறப்படுவது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். ரவீனாவும் தன் முகத்தை மூடிய படி இரு சக்கர வாகனத்தில் இருந்தார். அவர்களுக்கு நடுவில் பிரவீன் உடல் இருந்தது. சிறிது நேரத்தில் அதே இரு சக்கர வாகனம் பிரவீன் இல்லாமல் இருவரும் மட்டும் வந்தனர். இதையடுத்து ரவீனா மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பிரவீன் - ரவீனாவுக்கு பிறந்த 6 வயது மகன் பிரவீனின் தந்தை வீட்டில் வசித்து வருகிறான்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்; மகளைக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த தாய்... உபி-யில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன் உறவினரின் 14 வயது மகளைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட விசாரணை 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களை பாதிக்கும் ரெளடிகளின் மீம்ஸ் & ரீல்ஸ்... கொலை சம்பவங்களின் பகீர் பின்னணி

நெல்லையில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் வகுப்பறையிலேயே தன் நண்பரை அரிவாளால் வெட்டியதுடன், அதனை தடுக்க முயன்ற ஆசிரியையையும் 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெ... மேலும் பார்க்க