செய்திகள் :

இயக்குநர் ராஜூமுருகன் : நாம் நன்றாக இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்குக் காட்டுவது என்பது ஒரு நோய்

post image

Vikatan Playல் நிறைய ஆடியோ புத்தகங்கள் இருக்கின்றன. அதனை நீங்கள் கேட்டு ரசித்து இருப்பீர்கள். அதில் முக்கியமான ஒரு புத்தகம் வட்டியும் முதலும். இந்த புத்தகம் முதலில் ஒரு தொடராக வெளிவந்தது. ஒவ்வொரு தொடரிலும் மனிதனுடைய மனிதனுடைய கீழ்மை, மேன்மை, குரோதம் என நுண் உணர்வுகள் பதியப்பட்டன. 

வட்டியும் முதலும்  நூலை எழுதிய திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ராஜூ முருகன் அண்மையில் RJ ஆனந்திக்கு ஒரு நேர்காணல் கொடுத்துள்ளார். அதன் எழுத்து வடிவம் இது. (கடந்த பாகத்தின் தொடர்ச்சி)

எல்லாமே வேகமாகிவிட்ட இந்த காலகட்டத்தில், இப்பொழுது இருக்கக்கூடிய மாணவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை இன்னமும் அழகாக ரசிக்க  என்றால் என்ன செய்ய வேண்டும்? 

வாசிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய ட்ராவல் செய்ய வேண்டும். விகடன் பிரசுரத்தில் ஜிப்ஸி எனும் புத்தகத்தை எழுதியுள்ளேன் (ஜிப்ஸி ஆடியோ புத்தகத்தைக் கேட்க). அது நான் சென்ற பயணங்களில் ஒரு பகுதி. எழுதாத பயணங்கள் நிறைய இருக்கிறது. இப்பொழுது நாம் வட மாநிலத்துக்கு ஒரு பயணம் மேற்கொள்கிறோம் என்றால் பேருந்து விட்டு இறங்கிய உடனே நாம் வெளியூர் காரர் என்று அங்கு உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். ஒருத்தர் இங்கே லாட்ஜ் வேண்டுமா என்று கேட்பார். மற்றொருவர் ரவீந்திரநாத் தாகூர் வீடு உங்களுக்குத் தெரியுமா? அங்கே செல்லலாம் என்று சொல்லுவார். எதுவுமே அழுக்கு கிடையாது. எல்லாமே அதன் போக்கில் தான் இருக்கின்றது. அன்றைக்கு நாம் என்ன முடிவு செய்கிறோம் என்பதனை பொறுத்துத்தான் அமைகிறது எல்லாமே. அந்த தேர்வைக் கொடுப்பது ஒரு டிராவல் தான். நம்மை நாமே நம்பிக்கை கொள்வதற்கும், அழகாக மாற்றிக் கொள்வதற்கும் பயணம் நமக்கு உதவுகிறது.

வட்டியும் முதல் Audio Formatல் கேட்க

ஜிப்ஸி Audio Formatல் கேட்க

ஒன்று Audio Formatல் கேட்க

பொருட்களை குறைவாக பயன்படுத்தி, வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் (Own Less Live More) என்று இப்போதுள்ள இளைஞர்களுக்கு எவ்வாறு கூறுவீர்கள்? 

நான் சோசியல் மீடியாக்களை பயன்படுத்துவதில்லை. நாம் நினைக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு இது ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மனிதர்கள் யாரும் அவர்களுக்காக வாழ்வதில்லை. பிறருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஒரு நோயாகவே உள்ளது அது தற்போது அதிகமாகவே உள்ளது. கார் வாங்கியவுடன் அதனை சோசியல் மீடியாவில் போஸ்ட் ஆக வெளியிடுவதன் தேவை இருக்கிறதா? அது ஒரு மிகப்பெரிய சாதனை இல்லை. அது நம்முடைய தேவை. இந்த உலகத்தில் கார் இல்லாமல் கோடான கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட அதிகமாக உழைப்பவர்கள். சொல்லப்போனால் அவர்கள் தான் உலகத்திற்காக அதிகமாகச் சிந்தனை செய்பவர்கள். அவர்களிடம் கார் கிடையாது. நான் நன்றாக இருக்கிறேன் என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் போதுமானது. ஆனால் அதனை சமூகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை என்று நான் சொல்கிறேன். அதில் ஒரு மோட்டிவேஷன் மற்றவர்களுக்கு கிடையாது என்று சொல்கிறேன். கோடான கோடி மக்களை நாம் ஹர்ட் செய்கிறோமோ என்று நான் நினைப்பேன்.

நாம் நன்றாக இருக்கிறோம் என்று மற்றவர்களுக்குக் காட்டுவது என்பது ஒரு நோய் என்று நான் நினைக்கிறேன். வாழ்க்கை என்பது வாழ்வதற்காகவே, அதனை யாருக்கும் காட்டிக் கொள்வதற்காகவோ, நிரூபிக்க வேண்டிய அவசியமோ இல்லை. இப்போது உள்ள மக்களிடம் உள்ள எண்ணம் என்னவென்றால் நம்மைச் சுற்றி எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் தாண்டி நாம் உயர வேண்டும் என்பதுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அதுதான் வன்மமாக மாறுகிறது. எல்லோருமே மற்றவர்கள் முன் நான் வாழ்கிறேன் எனக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். பொருட்கள் என்பது தேவை மட்டுமே. ஒரு தேவை ஏற்படும்பொழுது ஒரு பொருளை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். ஒரு செருப்பு வாங்குகிறோம் என்றால் அது பிய்கிற வரைக்கும் போட்டுக்கொண்டு பிறகு அதனைப் போட்டுவிட்டு வேறு ஒரு செருப்பு வாங்க வேண்டும் என்பது தான். அதனை கம்யூனிஸ்ட் இயக்கம் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. நிறைய கம்யூனிச தோழர்களை நான் பார்த்துள்ளேன். அந்த ஊருக்கு அவர்களால்தான் சாலை போடப்பட்டிருக்கும், பள்ளிகள் கட்டப்பட்டிருக்கும் ஆனால் அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் சாதாரணமாக நடந்து கொள்வார்கள். ஒரு தேநீர் மட்டும் குடித்துவிட்டு உலக அரசியலைப் பேசிவிட்டு அந்த நாளை சந்தோஷமாகக் கழிப்பார்கள். அவர்களால் தான் பல விஷயங்கள் நடந்திருக்கும் அதனை அவர்கள் கிளைம் கூடச் செய்ய மாட்டார்கள். அதனை வைத்துத் தான் நான் புரிந்து கொண்டேன் பொருள் என்பது பெருமை அல்ல, தேவை மட்டும்தான். அதனைத் தான் இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

வட்டியும் முதல் Audio Formatல் கேட்க

ஜிப்ஸி Audio Formatல் கேட்க

ஒன்று Audio Formatல் கேட்க

இளம் வயதில் அரசியல் சிந்தனை என்பது முக்கியம் என்று நீங்கள் சொல்வதற்கான காரணம் என்ன? 

நம்முடைய பொருளாதாரத்தை நம்முடைய சமூகத்தைத் தீர்மானிக்கிறது அரசியலாக தான் இருக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது நம்முடைய பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். அது தெரியும் போது தான் நாம் எதற்காகப் பேச வேண்டும் எதற்காக நிற்க வேண்டும் என்பது தெரிய வரும். தற்பொழுது சாம்சங் தொழிற்சாலையில் தொழிற்சங்க வேண்டும் என்று ஒரு போராட்டம் நடக்கிறது என்றால் அது ஏன் நடக்கிறது என்று மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும் தெரிய வேண்டும். அந்த மொபைல் நாளை நம் கைக்கு வராமல் கூட போகலாம். இன்றைய காலகட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒரே ஒரு குடையின் கீழ் வந்துவிட்டது. கிராமம் நகரம் என்பது கூட ஒரே சமநிலையில் வந்துவிட்டது. நமக்கு நடக்கின்ற ஒரு விஷயத்தை எங்கோ ஒருவர் தீர்மானிக்கிறார் என்பது தான் உண்மை. மக்கள் வரிப் பணத்தை கடனாகப் பெரு முதலாளிகள் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த கடன் மட்டும் சுலபமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் ஒரு விவசாயக் கடன் என்பது தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை நாம் சாதாரணமாகப் பேசுகிறோம். ஆனால் இந்த அடிப்படையான விஷயம், ஒரு அரசு எப்படி இயங்குகிறது? ஒரு தேர்தல் எப்படி நடக்கிறது? எவ்வளவு செலவு செய்கிறார்கள்? அதை எப்படி முதலாளியிடம் இருந்து வாங்குகிறார்கள்? ஒட்டு மொத்தமாகத் தேர்தலில் புழங்கக்கூடிய பணத்தை எப்படி அவர்கள் திரும்பிச் சம்பாதிப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இவையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு அரசியல் தெரிய வேண்டும் என்பதுதான் முக்கியமானது. 

வட்டியும் முதல் Audio Formatல் கேட்க

ஜிப்ஸி Audio Formatல் கேட்க

ஒன்று Audio Formatல் கேட்க

‘ஒன்று’ என்ற காதல் கதைகள் தொகுப்பு நீங்கள் எழுதியுள்ளீர்கள். இந்த காலகட்டத்தில் காதல் இல்லாமல் இருக்க முடியாது. அதனைப் பற்றி சொல்லுங்கள்? 

அந்த தொகுப்பை நானும் கண்ணன் சார் அவர்களும் இணைந்து தான் எழுதினோம் (ஒன்று தொகுப்பை Audio Formatல் கேட்க).  இருவன் என்ற பெயரில்தான் அதனை எழுதினோம். பதினோரு கதைகள் எழுதினோம். கண்ணன் சாருடன் டிஸ்கசனில் இருக்கும்பொழுது காதல் கதைகள் எழுதுவோம் என்று திட்டமிட்டு எழுதியது தான் அது. காதலுடைய வெவ்வேறு டைமென்ஷன்களை பேசக் கூடியதாக இருக்க வேண்டும் என்று எழுதியது தான் ஒன்று என்ற காதல் கதைகள் தொகுப்பு. அல்டிமேட் ஆகக் காதலிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆனால் அதனை தாண்டி சமூகத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அந்த புத்தகத்தில் ஒரு இடத்தில் விழிச்சவால் கொண்ட பெண்ணுக்கான காதல் இருக்கும். மற்றொரு இடத்தில் ஒரு ஃபாரினரை ஓடிவந்து கல்யாணம் செய்கிறது இருக்கும். ஒரு கதையில் காதலிக்கின்ற பெண்ணை கொலை செய்யச் செல்வான். பொதுவாக காதல் என்றாலே நகைச்சுவையும் எமோஷனும் இரண்டுமே உண்டு. எனவே அந்த இரண்டும் இந்த கதைகளில் இருக்க வேண்டும் என்றுதான் எழுதினோம். சுஜாதா அவர்களுடைய கதைகளில் அங்கங்கே சர்க்காசமான நகைச்சுவை என்பது இருந்து கொண்டே இருக்கும். கிரா உடைய கதைகளிலும் இருக்கும். ஒன்று தொகுப்பிலிருந்து நிறைய சீன்ஸ் எடுத்துப் பல திரைப்படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். சில பேர் சொல்லுவார்கள் அந்த கதைகளிலிருந்து சில சீன்களை எடுத்துள்ளேன் என்று சில பேர் சொல்ல மாட்டார்கள். அது ஒரு நல்ல அனுபவம். 

வட்டியும் முதல் Audio Formatல் கேட்க

ஜிப்ஸி Audio Formatல் கேட்க

ஒன்று Audio Formatல் கேட்க

காதலிப்பது என்பது நம்முடைய வாழ்க்கையை அழகாக்கக் கூடிய ஒரு விஷயம். இளமைக்காலத்தில் காதல் பற்றி உங்களுடைய கருத்து? 

காதல் என்பது இலக்கியத்திலும், கவிதைகளிலும் ஒரு நிழல் போல இருந்து கொண்டே இருக்கும். அதனைக் காலையிலிருந்து எப்போதும் பிரிக்கவே முடியாது. கலா பிரியா உடைய கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாண்டி விளையாட்டின்
முதல் உப்பை நான்
கடவுளுக்குக் கொடுத்தது
கிடையாது

முதல் பல் விழுந்தபோது
சாணியில் பொதிந்து
சொர்க்கம் நோக்கி
எறிந்தது கிடையாது

ஒரே ஒரு தடவைதான்
விட்டில் பூச்சிகளை
பக்கத்துக்கொன்றாய்
நூலில் கட்டி
பரிதவிக்க விட்டிருக்கிறேன்

மருத மர நிழல்கள் மீட்டாத
தண்டவாளச் சோகங்களை
எனக்கேன் நிரந்தரித்தாய் சசி

என்ற கவிதை. இதில் “மருத மர நிழல்கள் மீட்டாக தண்டவாள சோகங்களை எனக்கே நிரந்தரித்தாய்” என்பது மிகவும் ஆழமாகத் தனிமையைக் காட்டுகிறது. தனிமையாக்கப்படுவது என்பது காதலில் தான் வரும். கலாப்ரியா சசி என்று காதலியைக் குறிப்பிடுவார். அதேபோல் பாரதி ‘ கண்ணமா ‘ என்று குறிப்பிடுவார். இப்படி கலையில் காதலிக்கும், காதலனுக்கும் காதலர்களுக்கும் இடம் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. அணுவணுவாய் சாவதென்று முடிவெடுத்த பிறகு காதலியை விடச் சிறந்த வழி எதுவுமில்லை என்று அறிவுமதி சொல்வார். இப்படி காதல் என்பது லிட்ரேச்சர் இருக்கும் வரை சொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். 

வட்டியும் முதல் Audio Formatல் கேட்க

ஜிப்ஸி Audio Formatல் கேட்க

ஒன்று Audio Formatல் கேட்க

நீங்கள் படித்த காதல் கதைகளில், மற்றவர்களுக்கு ரெகமெண்ட் செய்ய வேண்டும் என்றால் எதனைச் சொல்வீர்கள்? 

காதல் என்றால் ஜென்னிமார்க்ஸ் உடைய காதல் கதை என்பது மிகவும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கும். ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் லேண்ட்ஸ்கேப் காலகட்டத்தில் நடந்தது. தேஜா உடைய அம்மா வந்தாள் என்ற காதல் கதை உள்ளது. கிரிஜாவுடைய மோகமுள் என்பதனை நாம் எவர் கிரீனாக சொல்லலாம். யமுனா கதாபாத்திரம் என்பது காதலுக்கான சிம்பலாக இருக்கிறது. எவ்வளவு காலம் போனாலும் சலிக்காத ஒரு விஷயம்தான் காதல். அதனை யமுனா கதாபாத்திரம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அதனால் மோகமுள் என்பதை நான் தாராளமாக ரெகமெண்ட் செய்வேன். 

வட்டியும் முதல் Audio Formatல் கேட்க

ஜிப்ஸி Audio Formatல் கேட்க

ஒன்று Audio Formatல் கேட்க

`நிற்காமல் போய்க்கொண்டே இரு, குதிரைக்காரா!' - டபிள்யூ.பி.யேட்ஸ்|கடற்தாண்டிய சொற்கள் - பகுதி 11

கவிஞராகப் பிறக்க வேண்டுமென்பது ஒரு தேர்வல்ல. அது ஒருவருக்குள் விதைக்கப்படும் விதை. அந்த விதை பருவமழையை நாடித் தானாகவே விழித்துத் துளிர்க்கிறது. உற்றவருக்கே தெரியும் அதன் சிராய்ப்பும், சிதைவும். ஒரு கவ... மேலும் பார்க்க

இயக்குநர் ராஜூமுருகன் நேர்காணல்: ‘நாம் எல்லாருக்கும் சொல்ல ஒரு கதை இருக்கிறது!' | Vikatan Play

Vikatan Play-ல் சுவார்ஸ்யமான ஆடியோ புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அதில் பலவற்றை நீங்கள் கேட்டு ரசித்திருப்பீர்கள். அவற்றுள் முக்கியமான ஒரு புத்தகம் `வட்டியும் முதலும்'. மனிதனுடைய கீழ்மை, மேன்மை, குரோத... மேலும் பார்க்க

இறையுதிர் காடு முதல் செரிமானம் அறிவோம் வரை: Vikatan Play யின் Top 5 Audio Books

வாசிப்பது எப்படி ஒரு சுக அனுபவமோ அப்படிதான் கேட்பதும். காணொளியாகப் பார்ப்பதை விடக் கேட்பது நல்லது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். காணொளி என்பது ஏற்கெனவே காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று. அங்கு உங்களால் ஒ... மேலும் பார்க்க

கென்யா: "மொழி என்பது மக்களுடைய வரலாற்று அனுபவத்தின் தொகுப்பு" - எழுத்தாளர் கூகி வா தியாகோ காலமானார்

கென்யா நாட்டின் அறியப்பட்ட எழுத்தாளர் கூகி வா தியாகோ. மே 28ம் தேதி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில், தனது 87வது வயதில் காலமாகியிருக்கிறார்.அவரது மகள் வஞ்சிகு வா கூகி, "எங்கள் தந்தை மறைந்துவிட்டார் எ... மேலும் பார்க்க

'நல்லிரவைக் கொட்டிய தேள்' - நிசிம் எசேக்கியல்|கடல் தாண்டிய சொற்கள் - பகுதி - 9

நவீன இந்திய ஆங்கிலக் கவிதையின் முன்னோடிக் கவிஞராகவும், காலனித்துவத்திற்குப் பிந்தைய இலக்கியத்தின் நவீன சிந்தனையின் முன்னணிக் குரலாகவும் கருதப்பட்ட கவிஞர் நிசிம் எசேக்கியல் இந்திய ஆங்கிலப் படைப்பியக்கத... மேலும் பார்க்க