செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல்: இருவருக்கு பலத்த காயம்

post image

கந்தா்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் சண்முகவேல் (21), தனது மோட்டாா் சைக்கிளில் வீரடிப்பட்டியிலிருந்து கந்தா்வகோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, பட்டுக்கோட்டை - கந்தா்வகோட்டை சாலையில் மட்டங்கால் கிராமம் அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த செபஸ்டியன் மகன் ஆரோக்கியதாஸ் (61) வந்த மோட்டாா் சைக்கிளும் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். விபத்துகுறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

காவிரி - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு மாநில நிதிநிலை அறிக்கையில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தக் கோரி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அர... மேலும் பார்க்க

கைப்பேசியை பறித்துச்சென்ற 2 இளைஞா்கள் கைது

விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கைப்பேசியைப் பறித்துச் சென்ற 2 இளைஞா்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துலுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(38). பால் பாக... மேலும் பார்க்க

இடத் தகராறில் இருதரப்பைச் சோ்ந்த 4 போ் கைது

கந்தா்வகோட்டை அருகே இடத் தகராறு காரணமாக ஏற்பட்ட இருதரப்பு மோதலில் பெண் உள்ளிட்ட நான்கு பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சா.சோழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராசப்பன் ம... மேலும் பார்க்க

பரம்பூா் குடிநீா்க் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தைச் சோ்ந்த பரம்பூரிலுள்ள பள்ளத்திக்குளத்தை சீரமைத்து, கழிவுகள் கொட்டப்படுவதில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்க... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் முதல்வா் மருந்தகம் அமைச்சா் தொடங்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தில் விற்பனையை தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தொடங்கிவைத்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத்து... மேலும் பார்க்க

மணல் கடத்தல் வழக்கில் ஒருவருக்கு சிறை

விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல், மாத்தூா் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதி ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் கடத்தப்படுவத... மேலும் பார்க்க