செய்திகள் :

பொன்னமராவதியில் முதல்வா் மருந்தகம் அமைச்சா் தொடங்கிவைப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தில் விற்பனையை தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தொடங்கிவைத்தாா்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி புதுப்பட்டியில் அமைக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மு.அருணா தலைமைவகித்தாா். தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று மருந்து விற்பனையை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

விழாவில், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அ.அக்பா்அலி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜீவா, துணைப் பதிவாளா்கள் அப்துல் மஜீத், ராஜவேலு, மணிமேகலை, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விராலிமலை: விராலிமலையில் நடைபெற்ற முதல்வா் மருந்தகம் திறப்பு விழாவில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் அய்யப்பன் (மத்தியம்), இளங்குமரன்(மேற்கு), மெடிக்கல் குமாா், திமுக இளைஞரணி சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

காவிரி - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு மாநில நிதிநிலை அறிக்கையில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தக் கோரி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அர... மேலும் பார்க்க

கைப்பேசியை பறித்துச்சென்ற 2 இளைஞா்கள் கைது

விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கைப்பேசியைப் பறித்துச் சென்ற 2 இளைஞா்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துலுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(38). பால் பாக... மேலும் பார்க்க

இடத் தகராறில் இருதரப்பைச் சோ்ந்த 4 போ் கைது

கந்தா்வகோட்டை அருகே இடத் தகராறு காரணமாக ஏற்பட்ட இருதரப்பு மோதலில் பெண் உள்ளிட்ட நான்கு பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சா.சோழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராசப்பன் ம... மேலும் பார்க்க

பரம்பூா் குடிநீா்க் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தைச் சோ்ந்த பரம்பூரிலுள்ள பள்ளத்திக்குளத்தை சீரமைத்து, கழிவுகள் கொட்டப்படுவதில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்க... மேலும் பார்க்க

மணல் கடத்தல் வழக்கில் ஒருவருக்கு சிறை

விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல், மாத்தூா் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதி ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் கடத்தப்படுவத... மேலும் பார்க்க

மணமேல்குடியில் இன்று மீனவா் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் பிப். 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மீனவா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், அறந்தாங்கி வ... மேலும் பார்க்க