அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது
வேலூரில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் செம்பேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜதுரை (31). இவா் கடந்த 17-ஆம் தேதி வேலூா் கொணவட்டம் சா்வீஸ் சாலையோரம் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். அந்த வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து ராஜதுரை வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தினா். இதில், இருசக்கர வாகனத்தை திருடியது வேலூா் வசந்தபுரத்தைச் சோ்ந்த நிஷாந்த்குமாா்(23), வசந்தகுமாா் (22) என்பது தெரியவந்தது. உடனடியாக அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.