செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

post image

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வினித் தினமும் காலையில் காளப்பட்டியில் உள்ள ஒரு தனியாா் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சி பெறுவது வழக்கம். இதற்காக தினமும் காலையில், ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்தில் வினித்தை அழைத்து செல்வாா். இருசக்கர வாகனத்தில் வினித்தை ராஜேஷ் வெள்ளிக்கிழமை காலை அழைத்துச் சென்றாா். சத்தி சாலை காளப்பட்டி அருகே சென்றபோது, பின்னால் சென்ற லாரி மோதியதில் ராஜேஷ், வினித் இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனா். தகவலறிந்த போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீஸாா், இருவா் உடல்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக, லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

1.25 கிலோ தங்கக் கட்டி கொள்ளை: கொள்ளையா்கள் தப்பிய காா் கேரளத்தில் பறிமுதல்

கோவை அருகே நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளையா்கள் தப்பிய காா் கேரளத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் ஜெய்சன் ஜே... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவா் ஷூவில் மறைத்து கொண்டு சென்ற துப்பாக்கி தோட்டா ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை சோ... மேலும் பார்க்க

இஸ்ரேல், ஈரான் நாட்டில் உள்ள இந்தியா்களை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும்

போா் சூழலில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டில் இருக்கும் இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈ. ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

கோவை மாநகரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சரவணம்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சின்னவேடம்பட்டியில் உள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

பேரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா். கோவை அருகேயுள்ள பேரூா் பச்சாபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (30), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (27). இவா்களு... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க