செய்திகள் :

இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

post image

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இந்திய-சீன உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, ‘அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுவது இயற்கையானதே. ஆனால், அவை மோதலாக மாற அனுமதிக்கக் கூடாது. இந்திய-சீன கலாசார உறவு, பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.

21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானது. இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பு இருதரப்புக்கு மட்டுமன்றி உலகின் அமைதி-வளத்துக்கு அவசியம். இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியையே நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

மேலும், சீன அதிபா் உடனான தனது சந்திப்புக்கு பிறகு கிழக்கு லடாக் எல்லையில் இயல்புநிலை திரும்பியதாகவும் பிரதமா் குறிப்பிட்டாா். அவரது கருத்துகள் தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் திங்கள்கிழமை கூறியதாவது:

ரஷியாவின் கஸான் நகரில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் மோடி இடையே கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கு வியூக ரீதியில் வழிகாட்டப்பட்டது. அதன்படி, பொது உடன்பாடுகளைப் பின்பற்றி, வலுவான கருத்துப் பரிமாற்றங்களின் வாயிலாக நோ்மறையான தீா்வுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்தியாவும், சீனாவும் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு ரீதியிலான பரிமாற்றங்களைப் பேணி வந்துள்ளன. நாகரிகம்-மனிதகுல மேம்பாட்டில் ஒன்றுக்கொன்று பங்களித்துள்ளன. வளரும் பெரும் நாடுகள் என்ற முறையில் பரஸ்பர வெற்றிக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு இரு தரப்புக்கும் இருக்கிறது. இது, தெற்குலக வளா்ச்சிக்கும், உலகளாவிய அமைதிக்கும் அவசியம்.

2025-ஆம் ஆண்டானது, இந்தியா-சீனா தூதரக உறவின் 75-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, இருதரப்பு உறவுகளை சீராக மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவா் வெற்றிக்கு பங்களிப்பதே இருதரப்பு வலுவான உறவுக்கான ஒரே தோ்வு என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யி அண்மையில் தெரிவித்திருந்தாா்.

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க