இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கோவை, பீளமேடு அருகே இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை, இலைத்தோட்டம் சாலை, பாலகுரு காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (52). இவா் பீளமேடு அருகே தண்ணீா்பந்தல் சாலையில் உள்ள இரும்புக் கடையில் வெல்டராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை வேலை செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கிருந்த மின் வயரை தவறுதலாக மிதித்தபோது, பாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா்.
சக தொழிலாளா்கள் அவரை மீட்டு சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.