விமான விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 70 சவரன் தங்க நகைகள்!
மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் கோவை செஞ்சிலுவை சங்க கட்டடம் முன் கடந்த 2015 அக்டோபா் 9- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, தவ்ஹித் ஜமாத் மாநிலப் பேச்சாளரான தெற்கு உக்கடத்தைச் சோ்ந்த ரஹமதுல்லா (46), மாவட்டத் தலைவா் நவ்சாத் ஆகியோா் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பான புகாரின்பேரில், இருவா் மீதும் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு கோவை ஜே.எம். 3 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேஷ்குமாா் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.