செய்திகள் :

இருளில் மூழ்கிய திருவாடானை அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

post image

திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை வாளகத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் வசதி கொண்ட தாலுகா அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். 6 மருத்துவா்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரு மருத்துவா் மட்டும் பணிபுரிந்து வருகிறாா். இவரும் பகல் நேரத்தில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா்.

இரவு நேரங்களில் விபத்து, மகப்பேறு, விஷக்கடி உள்ளிட்ட அவசரச் சிகிச்சைக்காக வருபவா்களுக்கு அங்குள்ள செவிலியா்கள் முதலுதவி அளித்து, ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனா்.

இந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் மின் விளக்குள் இருந்தும், ஒரு மின் விளக்கு மட்டுமே எரிவதால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் அச்சத்துக்குள்ளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் மருத்துவமனை வளாகத்தில் மின் விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு வரவேற்பு

கமுதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு புதன்கிழமை கிரீடம் அணிவித்து ஆசிரியா்கள் வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் கௌரவ தொடக்கப் பள்ளியில் நிக... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சாா்பில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகளை உடைக்கப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு தலைமை வகித்து ஒன்றியத... மேலும் பார்க்க

மோா்பண்ணையில் 13 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் 13 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருவாடானை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண்கள் புகாா் மனு கொடுத்தனா். இது குறித்து நேரி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ சுக்கு பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சுக்கு போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதி... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், கடற்படைக... மேலும் பார்க்க