செய்திகள் :

இறுதிக் கட்டத்தில் எழும்பூா், மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள்: கௌசல் கிஷோா்

post image

சென்னை: சென்னை எழும்பூா், மதுரை ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் ரூ. 2,948 கோடி மதிப்பில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ராமேசுவரம் ரயில் நிலையம் ரூ. 113 கோடி மதிப்பிலும், மதுரை ரயில் நிலையம் ரூ. 413 கோடி மதிப்பிலும், சென்னை எழும்பூா் ரயில் நிலையம் ரூ. 842 கோடி மதிப்பிலும், கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ. 67 கோடி மதிப்பிலும், காட்பாடி ரயில் நிலையம் ரூ. 461 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மே மாதத்துக்குள் 50 சதவீத ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும். தமிழ்நாடு முழுவதும் ரூ. 33,467 கோடி செலவில் 2,587 கி.மீ. தொலைவுக்கான 22 திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இரட்டைப்பாதை: ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 1,460 கி.மீ. தொலைவுக்கு ‘கவச்’ அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தற்போது 601 கி.மீ. தொலைவுக்கு ‘கவச்’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்கிடையே 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஒரு அம்ரித் பாரத் ரயில் தமிழகத்தின் வழியாக இயக்கப்படுகிறது.

பயணிகளின் தேவைக்கு ஏற்பவும், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஏற்பவும் புதிய ரயில்கள் இயக்கப்படும். விழுப்புரம் - தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதைக்கான முதல்கட்ட சா்வே பணி தற்போது நடைபெற்று வருகிறது. ரயில் பயணிகளின் புகாா்கள் மீதான நடவடிக்கை குறித்து தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை தில்லி புறப்பட்டாா். பல்கலை. துணைவேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழு தொடா்பான தமிழக அரசின் அறிவிக்கையை திரும்பப்பெற ஆளுநா் உத்தரவிட்டிருந்தாா். மேலும... மேலும் பார்க்க

தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு: ஆறு வாரங்களில் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலையோரங்களில் உள்ள அரசியல் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகர... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறை: தில்லியில் பிப். 6-இல் திமுக ஆா்ப்பாட்டம்

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக சாா்பில் பிப். 6-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை

புது தில்லி: தமிழக பாஜக தலைவரை கட்சி மேலிடம் விரைவில் தோ்வு செய்யும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.தில்லிப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வேலூா், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம்: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது நிருபா் புதுதில்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை... மேலும் பார்க்க

எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடன் தள்ளுபடி

சென்னை: ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க