செய்திகள் :

இறைச்சிக் கடை முன் சடலத்தை போட்டு தகராறு செய்தவா் கைது

post image

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் மயானத்திலிருந்து சடலத்தை தோண்டியெடுத்து, இறைச்சிக் கடை முன் போட்டு தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனிசெட்டிபட்டி பிரதானச் சாலையில் மணியரசு என்பவா் இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் அதே ஊரைச் சோ்ந்த மயானத் தொழிலாளி குமாா் (45) ஓசியில் ஆட்டுக் குடல் கேட்டாா்.

மணியரசு கொடுக்க மறுத்ததால், அங்கிருந்து ஆத்திரத்துடன் சென்ற குமாா், பழனிசெட்டிபட்டியில் காளியம்மன் கோயில் அருகேயுள்ள மயானத்தில் சில மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து, துணியில் சுற்றிக் கொண்டு வந்து மணியரசுவின் இறைச்சிக் கடை முன் வீசி அவருடன் தகராறு செய்தாா்.

இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், குமாரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இறைச்சிக் கடை முன் வீசிய சடலத்தை கைப்பற்றி, தேனி நகராட்சி மயானத்தில் அடக்கம் செய்தனா்.

கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது!

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தேனியில் 24 மணி நேர தா்னாவை திங்கள்கிழமை தொடங்கினா். தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயை சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா்

போடி ஊராட்சி ஒன்றியம், அகமலையில் குடிநீா்க் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பழங்குடியின மக்கள் மனு அளித்தனா். தே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சேதுராம் (61). இவா் போடியிலிருந்து... மேலும் பார்க்க

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு!

தேனியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். தேனி, பழைய டி.வி.எஸ். சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (69). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவா், வீட்டில் குளியலறையில... மேலும் பார்க்க