செய்திகள் :

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

post image

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றுகையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டு செல்வப்பெருந்தகை தடுக்கப்பட்டிருக்கிறார். 'இது 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை!' என செல்வப்பெருந்தகை ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.

செல்வப்பெருந்தகை பேசியதாவது, 'திருச்செந்தூர் முருகர் கோயிலின் குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அங்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். அதிகாரிகள் இங்கே மெத்தனப் போக்கை கடைப்பிடித்திருக்கின்றனர்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

யார் யார கட்டுப்படுத்துறதுன்னு புரியாம இருக்காங்க. 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இது. ஒரே இரவில் போக்கி விட முடியாது. சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிற முதல்வருக்கும் அறநிலையத்துறை அமைச்சருக்கும் எந்த களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மக்களோடு மக்களாக நின்று தரிசித்துவிட்டு வந்தேன். இறைவனை கூட பார்க்க முடியவில்லை. தமிழிசையை ஏன் அனுமதித்தார்கள், என்னை ஏன் தடுத்தார்கள்? என புரியவில்லை. அதிகாரிகள் அதிகாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் பிரச்னை.' என்றார்.

'நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைக்கிறேன்...' - காரணம் சொல்லும் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். நேற்று, அவர் வெள்ளை மாளிகையில் பேசும்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார... மேலும் பார்க்க

சகோதர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த `இந்தி திணிப்பு'- வலுப்பெறுகிறதா உத்தவ்-ன் சிவசேனா?|In Depth

1960 காலக்கட்டத்தில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி தழைத்தோங்கி இருந்தது. இந்தப் பொருளாதார நெருக்கடி காங்கிரஸிற்கு எதிரான மனப்போக்கை அதிகரிக்க செய்திருந்தது. கம்யூனிஸ்ட்கள், சோசியலிஸ்டுகள், திராவிட க... மேலும் பார்க்க

`அனைத்து கூட்டணியிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்!' - ஜவாஹிருல்லா

"எங்கள் கூட்டணியில் மட்டுமல்ல, அனைத்து கட்சிகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரிநிதித்துவம் வழங்கவேண்டும்..." என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசியுள்ளார். ஜவாஹிருல்லாமதுரை பாண்டி ... மேலும் பார்க்க

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி ச... மேலும் பார்க்க