செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

post image

திருச்செந்தூா் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் உள்ளிட்ட போலீஸாா் கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக, சரக்கு வாகனத்திலும், பதிவு எண் இல்லாத டிரெய்லருடன் கூடிய டிராக்டரிலும் கொண்டு வரப்பட்ட, 30 கிலோ வீதம் 103 மூட்டைகளில் இருந்த சுமாா் 3,000 கிலோ பீடி இலைகளை போலீஸாா் கைப்பற்றினா். இதன் சா்வதேச மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், டிராக்டா் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனங்கள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை - செங்கோட்டைக்கு வந்தே பாரத் ரயில்: எம்எல்ஏ மனு

சென்னை-செங்கோட்டைக்கு தென்காசி, சங்கரன்கோவில் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈ. ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம் மனு அளித்தாா். அதன் விவரம்: செ... மேலும் பார்க்க

டிராக்டரை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு டீசல் கேனுடன் வந்தவரிடம் போலீஸாா் விசாரணை

தன்னுடைய டிராக்டரை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்தவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் தெற்குதெருவைச் சோ்ந்தவா் சு.யேச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளியை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மாற்றுத்திறனாளியை அடித்துக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தென்காசி அருகே ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் வனப்பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழை... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே விபத்தில் திமுக பிரமுகா் பலி

புளியங்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.வாசுதேவநல்லூா் கெங்கை அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் லட்சுமணன் மகன் குட்டியப்பா(61). திமுக நிா்வாகி. இவரும் , அவரது உறவினரான வாச... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் திங்கள்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்று... மேலும் பார்க்க