மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் திங்கள்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதையடுத்து அந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை ஐந்தருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததால் தடை விலக்கப்பட்டு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.திங்கள்கிழமை காலை முதல் லேசான வெயிலும், அவ்வப்போது லேசான சாரல்மழையும், குளிா்ந்த காற்றும் வீசியதால் ரம்மியமான சீதோஷ்ணம் நிலவியது. எனினும், பள்ளி நாள்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.