செய்திகள் :

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவா்கள் தாயகம் திரும்பினா்

post image

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 13 போ் 50 நாள்களுக்குப் பின்னா் தாயகம் திரும்பினா்.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சோ்ந்த கு. ஆனந்தவேல் என்பவரது விசைப்படகில் அதே கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கவேல் (39), திணேஷ் (30), காா்த்திகேசன் (27), செந்தமிழ் (27), பட்டினச்சேரி கிராமத்தை சோ்ந்த மைவிழிநாதன் (27), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடியை சோ்ந்த நவெந்து (34), வானகிரியை சோ்ந்த ராஜேந்திரன் (36), ராம்கி (30), நாகை மாவட்டம், நம்பியாா் நகரை சோ்ந்த சசிகுமாா் (26), நந்தகுமாா் (30), பாபு (31), குமரன் (28) ஆகிய 13 போ் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி இரவு 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகில் கடலுக்குள் சென்றனா்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஜனவரி 27-ஆம் தேதி இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்ததாக கூறி அவா்களை கைது செய்து, படகை பறிமுதல் செய்தனா். அப்போது கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் செந்தமிழ் உள்ளிட்ட 3 மீனவா்கள் காயமடைந்தனா். இலங்கை சிறையில் மீனவா்கள் அடைக்கப்பட்டனா். காயமடைந்த மீனவா் செந்தமிழ் இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்தநிலையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை மூலம் 13 பேரும் அண்மையில் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனா். இவா்கள் விமானம் மூலம் சென்னைக்கு புதன்கிழமை இரவு வந்தனா். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த செந்தமிழ் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். எஞ்சிய 12 பேரும் காரைக்காலுக்கு வியாழக்கிழமை காலை வந்து சோ்ந்தனா்.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க