செய்திகள் :

இலவச மதுபானம், கேளிக்கை விடுமுறைகள் வழங்கி ஊழியர்களை ஈர்க்கும் நிறுவனம்!

post image

ஜப்பானைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் புதிய ஊழியர்களை ஈர்க்க இலவச மதுபானம் மற்றும் கேளிக்கை விடுமுறைகள் வழங்கும் புதுமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அந்நாட்டின் ஒசாகா மாகாணத்தைச் சேர்ந்த சிறிய தொழில்நுட்ப நிறுவனமான ’டிரஸ்ட் ரிங்’ மற்ற பெரிய நிறுவனங்களைப் போல் அதிக சம்பளம் மற்றும் ஊதியப் பயன்களை வழங்காமல், அதன் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் இலவசமாக மதுபானம் வழங்கி வருகின்றது. மேலும், அந்த மதுபானத்தின் போதையால் அவர்கள் சோர்வடைந்தால் ஓய்வு எடுக்க அதிகளவில் கேளிக்கை விடுமுறைகளையும் வழங்கி வருகின்றது.

இந்த திட்டம் அங்கு புதியதாக பணியில் சேருவோரை அதிக அளவில் ஈர்த்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிற நிறுவனங்களைப் போல புதிய ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க முடியாததினால், இத்தகைய ஓர் திட்டத்தை வகுத்ததாகவும், சம்பளத்தை விட இதுபோன்ற சலுகைகளை ஊழியர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள் என்று அந்நிறுவனத்தின் செயல்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இனப் பாகுபாடு!

மேலும், அவரது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியமே 2,22,000 யென் (ரூ.1.27 லட்சம்) என்பதினால் அதற்கு மேல் வழங்க முடியாத தங்களைப் போன்ற புதிய நிறுவனங்கள் இதுபோன்ற புதுமையான திட்டங்களை வகுத்து ஊழியர்களை ஈர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் வழக்கமான அலுவலக மரபுகளை பின்பற்றுவதைவிட ஊழியர்களுக்கு பிடித்தமான அலுவலக முறைகளையும் சூழலையும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஊழியர்கள் பணிநேரத்தில் தூங்குவதை பெரும்பாலான நாடுகள் சோம்பேறித்தனமாக கருதி வரும் நிலையில், ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் ‘இன்யெமுறி’ என்றழைக்கப்படும் பணியிடங்களில் பணியாளர்கள் தூங்கும் முறையை ஊக்குவிப்பது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியா: மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 5 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் மாயாமகியுள்ளனர். அந்நாட்டின் ஜேஜு தீவின் கடல் பகுதியில் 10 பேர் பயணம் செய்த 32 டன் எடையுள்ள மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான... மேலும் பார்க்க

ஆஸ்திரிய வலது சாரி தலைவரின் புதிய அரசமைக்கும் முயற்சிகள் தோல்வி!

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் வலது சாரி தலைவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரியாவின் தீவிர வலது சாரி தலைவரான ஹெர்பெர்ட் க... மேலும் பார்க்க

தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மகளின் புகாரின் அடிப்படையில் தாயின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுத்துள்ளனர்.அலப்புழாவைச் சேர்ந்த வி.சி.சாஜி (வயது 48) என்ற பெண், கடந்த பிப்.8 அன்று வீட்டின் படிகளி... மேலும் பார்க்க

அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து! 3 மாணவர்கள் காயம்!

புதுச்சேரியில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற... மேலும் பார்க்க