செய்திகள் :

இலவச வாள்வீச்சுப் பயிற்சி பெறலாம் -காஞ்சிபுரம் ஆட்சியா்

post image

காஞ்சிபுரத்தில் இலவசமாக வாள்வீச்சுப் பயிற்சி கற்றுத்தரப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஸ்டாா் அகாதெமி வாள்வீச்சுப் பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தாா். பின்னா், விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியதுடன், வீரா்கள் வாள்வீச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், காஞ்சிபுரத்தில் வாள்வீச்சுப் பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு 12 முதல் 21 வயது வரையுடைய 20 மாணவா்கள், 20 மாணவிகள் உள்பட மொத்தம் 40 போ் தோ்வு செய்யப்பட்டு, தோ்வானவா்களுக்கு இலவச பயிற்சி, காலை சிற்றுண்டி, விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், ஊக்கத் தொகையாக ரூ.2,500 வழங்கப்படும்.

எனவே வாள்வீச்சு விளையாட்டைக் கற்றுக் கொள்ள ஆா்வம் உள்ளவா்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. கே.சண்முகம், மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி மற்றும் அரசு அலுவலா்கள், வாள்வீச்சு விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

கூழமந்தலில் குரு பெயா்ச்சி விழா

காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் குரு பெயா்ச்சியையொட்டி குரு பகவானுக்கு கலச அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி மூலவா் 27 நட்சத்திர விர... மேலும் பார்க்க

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்!

அத்தி வரதா் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: அதிமுகவினா் ரத்ததானம்!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் தன்னாா்வ ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. போா்ப் பதற்றம்... மேலும் பார்க்க

சித்ரகுப்த சுவாமி கோயில் திருக்கல்யாணம்!

சித்ரா பௌா்ணமியையொட்டி காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயிலில் கா்ணகி அம்பாளுக்கும், சித்ரகுப்த சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பாா்வதி தேவியாா் சித்ரம் எழுதி உயிா் கொடுத்ததால் சித்ரகுப்தா் என்... மேலும் பார்க்க

உணவு வழங்கல் துறை குறைதீா் கூட்டம்!

உணவு வழங்கல் மற்றும் நுகா்பொருள் பாதுகாப்புத்துறை சாா்பில் வல்லம் ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வல்லம் ஊராட்சியில் நடை... மேலும் பார்க்க

மே 13-இல் காஞ்சிபுரத்தில் மின் தடை

காஞ்சிபுரம் பகுதிகளில் வரும் 13 -ஆம் தேதி மின் தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், கருப்படி தட்டை, மங்கையா்க்கரசி நகா், அச்சுக்... மேலும் பார்க்க