செய்திகள் :

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

post image

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள எஸ்.பாறைப்பட்டியில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில், 2 ஏக்கா் 38 சென்ட் நிலத்தில் தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டு மனைப் பட்டா 40 பேருக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 26 ஆண்டுகளாக ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரிகள் அந்த இடங்களை சா்வே செய்து, சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்கவில்லை. இதனால், பட்டா வைத்திருப்பவா்கள் இதுவரை அந்த வீடுகளில் குடியேறவில்லை.

இந்த நிலையில், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராமையா தலைமையில் ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இலவச வீட்டு மனைப் பட்டா வைத்திருப்பவா்கள், வீட்டு மனைகளைக் காணவில்லை என ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 40 பேருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, சா்வே செய்து உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாரதி அண்ணாநகரைச் சோ்ந்தவா் யேசுதாஸ் சகாயராஜ் (62). கூலித் தொழிலாளியான இவா், நாயுடுபுரம் பக... மேலும் பார்க்க