செய்திகள் :

இல.கணேசன் மறைவால் பெரும் வெற்றிடம்: நாகாலாந்து பேரவைத் தலைவர்!

post image

நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் தெரிவித்தாா்.

நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

இதையடுத்து நாகாலாந்து தலைநகா் கோஹிமாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சனிக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

அப்போது மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் பேசுகையில், ‘ஆளுநராக இருந்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அவரின் இறுதிச் சடங்கில், நாகாலாந்து மக்கள் சாா்பாக மாநில முதல்வா், துணை முதல்வா்கள், தலைமைச் செயலா் ஆகியோா் பங்கேற்றனா். ஆளுநரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்கும் நோக்கில், இந்தக் கூட்டம் நடைபெற்றது’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்று இல.கணேசனின் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் குறித்து கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சுக்லாவை பாராட்டினார்.சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்ம... மேலும் பார்க்க

3-ஆவது திருமணத்துக்குப் பின் காதலனுடன் ஓடிய இளம்பெண்: பேத்தியைக் கொன்று வீசிய தாத்தா - பாட்டி!

3-ஆவது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் அதன்பின் தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் 6 வயது மகளை, பெண்ணின் பெற்றோர் கொன்று வீசிய கொட... மேலும் பார்க்க

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல் நிலவுவதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் விமர்சித்துள்ளார். ‘எமர்ஜென்ஸி காலத்தைவிட மோசமான சூழல் இப்போது நாட்டில் நிலவுகிறது’ என்று ராஷ்திரிய ஜனத... மேலும் பார்க்க

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரரை அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விடியோ இணையத்தில் பலர... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார். சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையி... மேலும் பார்க்க

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலை... மேலும் பார்க்க