செய்திகள் :

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

post image

ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார்.

சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும், நலம் பெற வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக்கிற்கு (78), நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை புவனேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்தவாறு விடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

பிஜு ஜனதா தளம் பகிர்ந்துள்ள இந்த விடியோவில், ''சம் மருத்துவமனையில் நான் (நவீன் பட்நாயக்) அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் என்னை மிகச்சிறப்பாக கவனித்துக்கொள்கின்றனர். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்பினால், நவீன் நிவாஸ் (நவீன் பட்நாயக் வீடு) என்றுமே உங்களை வரவேற்றவாறு இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கழுத்துவடத்தில் ஏற்பட்ட பிரச்னைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன் பட்நாயக்கிற்கு, கடந்த ஜூன் 12ஆம் தேதி முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 22 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதையும் படிக்க |டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

Former Odisha chief and BJD chief Naveen Patnaik video from hospital

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல் நிலவுவதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் விமர்சித்துள்ளார். ‘எமர்ஜென்ஸி காலத்தைவிட மோசமான சூழல் இப்போது நாட்டில் நிலவுகிறது’ என்று ராஷ்திரிய ஜனத... மேலும் பார்க்க

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரரை அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விடியோ இணையத்தில் பலர... மேலும் பார்க்க

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலை... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று (ஆக. 18) பேசினார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த வாரம் நடத்திய ஆலோசனையின் மதிப்பீடுகள் குறித... மேலும் பார்க்க

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

தேர்தல் ஆணையமே ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தை விமர்சித... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

கேரளத்தில் வாக்கு முறைகேடு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினரை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கேரள மாநிலத்தின் திரிசூரில் உள்ள சக்தன் தம்புரான் ச... மேலும் பார்க்க