‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் ம...
உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!
உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று(ஆக. 18) நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்க, உக்ரைன், ஐரோப்பிய தலைவர்கள் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
யார் யார் பங்கேற்கிறார்கள்?
வெள்ளை மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் முதலில் இருதரப்பு ஆலோசனையில் பங்கேற்கிறார் உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி. இந்தச் சந்திப்பு ஆக. 18 இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.
சுமார் 1 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த ஆலோசனைக்குப்பின், பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் பிரைடுரிச் மெர்ஸ், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லெயென், நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரூட் ஆகியோரை டிரம்ப் வரவேற்று அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த ஆலோசனை தொடங்குகிறது.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஸெலென்ஸ்கி - டிரப்பு இடையிலான பேச்சுவார்த்தை படுதோல்வியில் முடிந்தது. இதன் எதிரொலியாக, சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவை இந்தப் பேச்சுவார்த்தை பாதிக்கவும் தவறவில்லை.
இதைக் கருத்திற்கொண்டு, உக்ரைன் - ரஷியா இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் இம்முறை சுமூக முடிவு எட்டப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன், அமெரிக்க அதிபர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.