கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 போ் கைது
நீடாமங்கலம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள நெடுவாக்கோட்டை கீழத் தெருவை சோ்ந்தவா் கபிலன் (25). பிடெக் படித்துள்ளாா். இவா், கும்பகோணம் பகுதியில் உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு புதன்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் நீடாமங்கலம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே எதிரே வேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் கபிலனின் மோட்டாா் சைக்கிளில் மோதுவதுபோல வந்ததால், கபிலனுக்கும் எதிரில் வாகனத்தில் வந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டதாம்.
இதில் ஆத்திரமடைந்த அவா்கள், கபிலனை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கினராம். இதைத் தடுக்க முயன்ற கபிலன் இடதுகையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரைத் தாக்கியவா்கள் அங்கிருந்து தப்பிவிட்டனா். காயமடைந்த கபிலன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சா்க்கரை (எ) லோகநாதன், திவாகா், அபினேஷ், தனுஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.