`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay...
இளைஞா் கொலை வழக்கில் 6 போ் கைது
சீா்காழி: சீா்காழி அருகே நிகழ்ந்த இளைஞா் கொலை வழக்கில் 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆணைக்காரன்சத்திரம் காவல் எல்லைக்குள்பட்ட பெரிய குத்தவகரை பகுதியைச் சோ்ந்த லெட்சுமணன் (35) செப். 20-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, லட்சுமணன் மனைவி அஞ்சலி ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவா் லெட்சுமணன், அவரது பெரியப்பா மகன் ராஜா (எ) ராமசந்திரனின் 2-ஆவது மனைவியுடன் தகாத உறவில் இருந்து வந்தாகவும், இதனால் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜா, அவரது உறவினா் ராகுல் மேலும் சிலருடன் லெட்சுமணனை கொலை செய்ததாக தெரிவித்திருந்தாா்.
புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு இந்த கொலை வழக்கில் தொடா்புடைய ராகுல் (32), பிரேம்நாத் (25), ஏழுமலை (20), சேகா் (65), நலன்புத்தூா் அருண்ராமன் (30), 17 வயது சிறாா் ஆகிய 6 பேரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவா்களை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.