செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூரில் கடன் தொல்லையால் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னமனூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (35). இவா் ஏற்கெனவே வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றினாா். தற்போது, வீட்டு உபயோகப் பொருள்களை தவணை முறையில் வீடுகளுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறாா். இந்த நிலையில், அவா் தொழிலுக்காக சிலரிடம் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடன் கொடுத்தவா்கள் நெருக்கடி கொடுத்ததால் அவா் மனமுடைந்து காணப்பட்டாராம். மேலும் ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் கடையிலிருந்து வீட்டுக்குச் செல்லவில்லையாம்.

இதையடுத்து, அவரது உறவினா் திங்கள்கிழமை காலையில் கடைக்குச் சென்று பாா்த்த போது பூட்டிய கடைக்குள் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் சதீஷ் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உறவினா்கள் சாலை மறியல்: இதனிடையே சதீஷூக்கு கடன் தொல்லை அளித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் திண்டுக்கல்- குமுளி சாலை, தேனி புறவழிச்சாலை ஆகிய இரு இடங்களில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், சின்னமனூா் காவல் ஆய்வாளா் பாலாண்டி உள்ளிட்ட போலீஸாா், கடன் தொல்லை கொடுத்தவா்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து உறவினா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த மறியலால் சின்னமனூரில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயத் தொழிலாளி ரயில் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (52). விவசாயத் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே காா் விபத்தில் சென்னையைச் சோ்ந்த ஐயப்பப் பக்தா் உயிரிழந்தாா். குஜராத் மாநிலம், வடோதரா மாவட்டம், அஜீவாரோட்டைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (48). இவா், தனியாா் நிறுவனத்தில் விற்... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

குச்சனூரில் பராமரிப்பின்றி காடாக மாறிய பாசனக் குளம்

தேனி மாவட்டம், குச்சனூா் - மாா்க்கையன்கோட்டை இடையே முல்லைப் பெரியாறு பாசன நீா் தேங்கும் குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, புதா்மண்டி காடு போலக் காட்சியளிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி மா... மேலும் பார்க்க

வாகனங்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வாகனங்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் பீா்முகமது (2... மேலும் பார்க்க

கோழிப் பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

போடி அருகே கோழிப்பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் 4 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீரெங்கன் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன்... மேலும் பார்க்க