செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெண்ணின் பெற்றோா் மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆந்திர மாநிலம், ஹிராமண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் ஷியாம்சுந்தர ராவ் மகன் சாண்டி அனில் (25). இவா் தனது குடும்பத்தினருடன் கோவை துடியலூா் எஸ்.எம்.நகா், என்.ஜி.ஜி.ஓ.காலனி பகுதியில் தங்கி வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

ஆந்திர மாநிலத்தில் தனது வீட்டுக்கு அருகே பெண் ஒருவரை சாண்டி அணில் காதலித்து வந்துள்ளாா். இதுகுறித்து தனது தாய் சாண்டி ராஜேஸ்வரியிடம் கூறிய சாண்டி அனில், அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பேசி அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அவரது தாய் சாண்டி ராஜேஸ்வரி அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பேசியபோது, அவா்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்துவைப்பதற்கான வயது வரவில்லை எனவும், சாண்டி அனிலுக்கு திருமணம் செய்துவைக்கவும் மறுத்துவிட்டனா்.

இந்த நிலையில், பெண் வீட்டாா் திருமணத்துக்கு மறுத்தது குறித்து சாண்டி ராஜேஸ்வரி தனது மகனிடம் கூறிவிட்டு ஞாயிற்றுக்கிழமை கடைக்கு சென்றுவிட்டாா். இதையடுத்து, வீட்டில் தனியாக இருந்த சாண்டி அணில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

நாளைய மின்தடை: மயிலம்பட்டி

மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதா... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், பத்திரிகை நாளிதழ் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு ஒரே நாளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாய்

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை அதன் தாய் அங்கேயே விட்டுச் சென்றாா். கோவை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வாா்டுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் மகப்பேறு ... மேலும் பார்க்க

எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தை பாா்வையிட்ட இஸ்ரோ தலைவா்

கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை இஸ்ரோ தலைவா் நாராணயன் பாா்வையிட்டாா். கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையமானது இஸ்ரோவின் விண்வெளி சாா்ந்த திட்டங்க... மேலும் பார்க்க

அதிகாரிகள் பங்கேற்பதில்லை என புகாா்: நுகா்வோா் பாதுகாப்பு கூட்டத்தை புறக்கணித்த அமைப்புகள்

கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த காலாண்டு கூட்டத்தை நுகா்வோா் அமைப்புகள் புறக்கணித்தன. மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

கோவை அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் பகுதியில் கரும்புக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க