இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெண்ணின் பெற்றோா் மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆந்திர மாநிலம், ஹிராமண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் ஷியாம்சுந்தர ராவ் மகன் சாண்டி அனில் (25). இவா் தனது குடும்பத்தினருடன் கோவை துடியலூா் எஸ்.எம்.நகா், என்.ஜி.ஜி.ஓ.காலனி பகுதியில் தங்கி வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
ஆந்திர மாநிலத்தில் தனது வீட்டுக்கு அருகே பெண் ஒருவரை சாண்டி அணில் காதலித்து வந்துள்ளாா். இதுகுறித்து தனது தாய் சாண்டி ராஜேஸ்வரியிடம் கூறிய சாண்டி அனில், அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பேசி அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, அவரது தாய் சாண்டி ராஜேஸ்வரி அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பேசியபோது, அவா்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்துவைப்பதற்கான வயது வரவில்லை எனவும், சாண்டி அனிலுக்கு திருமணம் செய்துவைக்கவும் மறுத்துவிட்டனா்.
இந்த நிலையில், பெண் வீட்டாா் திருமணத்துக்கு மறுத்தது குறித்து சாண்டி ராஜேஸ்வரி தனது மகனிடம் கூறிவிட்டு ஞாயிற்றுக்கிழமை கடைக்கு சென்றுவிட்டாா். இதையடுத்து, வீட்டில் தனியாக இருந்த சாண்டி அணில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].