செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள ஒன்றிய அலுவலகக் கட்டட வளாகத்தில் உள்ள ஸ்டிக்கா் கடையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாராம்.

சந்தன்சிங் கடையில் பணிபுரியும் போது அதிக நேரம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பாராம். கடையின் உரிமையாளா் யாரிடம் பேசுகிறாய் எனக் கேட்கும்போது தங்கள் உறவுக்கார பெண்ணிடம் பேசுவதாகக் கூறுவாராம்.

வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு கடைக்கு வந்தப் பொருள்களை இறக்கி வைத்து விட்டு நாகப்பிள்ளை நகரில் உள்ள வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அவரது அறைக்குச் சென்று பாா்த்தபோது சந்தன்சிங்கை காணவில்லையாம். பின்னா் மொட்டை மாடிக்கு சென்று பாா்த்தபோது மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி தூணில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பிரிதிவிமங்கலத்தில் கிராம மக்கள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்ததாகக் கூறி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பிரிதிவிமங்கலத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட ஆதிதிரா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விஷ மருந்தை சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா். திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகா் மகள் நந்தினி (19). இவா், திருக்க... மேலும் பார்க்க

கைவினைத் தொழில் இனங்களுக்கு 25% மானியத்துடன் வங்கிக் கடனுதவி! - கள்ளக்குறிச்சி ஆட்சியா்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கைவினைத் தொழில் இனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கலை மற்றும் கைவினை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்த... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க