செய்திகள் :

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

post image

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "அண்ணா திமுக எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி திமுகதான் எங்களுக்கு எதிரி. எடப்பாடி என்ற துரோக மனிதர்தான் எங்கள் எதிரி" எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் மதுரைக் கப்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "மூன்றுபேரும் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கின்றனர். இது ஏற்கெனவே போட்ட திட்டம்தான். இப்படிப்பட்ட துரோகிகள் இருப்பதனால்தான் அதிமுக 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வரமுடியவில்லை.

செங்கோட்டையன் - டிடிவி தினகரன் - ஓபிஎஸ்
செங்கோட்டையன் - டிடிவி தினகரன் - ஓபிஎஸ்

ஓபிஎஸ்ஸா அதிமுகவை ஒருங்கிணைக்கப் போகிறார். சில நாட்களுக்கு முன்னர் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறினார். உண்மையான அதிமுக தொண்டனின் வாயிலிருந்து அந்த வார்த்தைவராது. 4 ஆண்டு காலமாகவே துரோகத்தை வீழ்த்துவோம் என டிடிவி சொல்லி வருகிறார். இவர்களால் எப்படி இணைய முடியும், இவர்கள் திமுகவின் பி டீமாக இருப்பார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை தலைமையின் கருத்தைக் கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர் காலம் முதல் அணி பிறழாமல் இருப்பது எங்களது அதிமுகதான். பயிர் செழிக்க வேண்டுமென்றால் களைகளை எடுக்க வேண்டும். களைகள் எடுக்கப்பட்டிருக்கிறது பயிர் செழிக்கும்." எனப் பேசியுள்ளார்.

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பா... மேலும் பார்க்க

'விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!' - உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க