செய்திகள் :

இஸ்ரேல் உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் மீது ஹமாஸ் தாக்குதல்! 50 பேர் பலி!

post image

காஸாவில் கடந்த சில மாதங்களில், ஹமாஸ் படையின் தாக்குதலில், இஸ்ரேல் ஆயுதம் வழங்கி உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவில் இஸ்ரேல் ஆயுதம் வழங்கி உருவாக்கிய, யாசர் அபு ஷாபாப் என்பவரின் தலைமையிலான தீவிரவாதக் குழுவுக்கும், ஹமாஸ் கிளர்ச்சிப்படையினருக்கும் இடையில் நேற்று (ஜூன் 10) மோதல் வெடித்துள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேல் நாட்டிலுள்ள ஊடகங்களில் வெளியான செய்திகளில், யாசர் அபு ஷாபாப்பை, பாதுகாக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் ஆதரவுப்பெற்ற அபு ஷாபாப் தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு சேவை அல்லது பாப்புலர் ஃபோர்ஸஸ் என்றழைக்கப்படும், அந்தக் குழு நேற்று (ஜூன் 10) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

”நிவாரணப் படைகளுக்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட, எங்களது தலைவர் யாசரின் உறவினர்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட வீரர்களை ஹமாஸ் படையினர் கொன்றுள்ளனர். மேலும், அப்பகுதியிலிருந்த வெடிப் பொருள்களின் எச்சங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டபோதும், நாங்கள் சில உறுப்பினர்களை இழந்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக, அபு ஷாபாப் கைது செய்யப்பட்டு காஸாவில் ஹமாஸ் படையின் கட்டுப்பாட்டிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலின்போது, அவர் சிறையிலிருந்து தப்பித்துள்ளார்.

தற்போது, இஸ்ரேலின் ஆதரவைப் பெற்ற அவரது குழுவில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து, கிழக்கு ரஃபா பகுதியில் செயல்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் ஏஜெண்டு என்றழைக்கப்படும் அபு ஷாபாப், ”காஸாவின் துரோகி” என சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும், இவரைக் கொல்வதற்கான தங்களது நோக்கத்தை ஹமாஸ் படை பொதுவெளியில் அறிவித்துள்ளது.

இத்துடன், அபு ஷாபாப்பின் படைக்கு, இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதன் மூலம், காஸாவில் அவர்களுக்கும், ஹமாஸ் படைக்கும் இடையில் உள் நாட்டுப் போர் துவங்கும் அபாயமுள்ளதாக இஸ்ரேலிய நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க:கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானியர்! ஏன்?

அமெரிக்காவுக்கு பதிலடி! இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்த... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் பதற்றம்! அமெரிக்காவுக்கு பிரிட்டன் ஆதரவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஈரானுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ரஷியா உள்ளிட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்ததில் 7 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள்.ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: வான்வெளியை மூடிய இஸ்ரேல்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா! ஐ.நா. கவலை!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் கவலை ... மேலும் பார்க்க

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் விளைவு! சர்வதேச கப்பல்களைத் தாக்கும் ஹவுதி!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.யேமன் நாட்டில் உள்ள (ஈரான் ஆதரவு பெற்ற) ஹவுத... மேலும் பார்க்க