செய்திகள் :

இஸ்லாமிய துதியை உச்சரிக்க மறுத்த கிறிஸ்தவரை கொலை செய்த பயங்கரவாதிகள்

post image

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை படுகொலை செய்த பயங்கரவாதிகள் மதரீதியாக அடையாளப்படுத்தி கொலை செய்தது தொடா்பான அதிா்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சோ்ந்த எல்ஐசி மேலாளா் சுஷீல் நந்தநீல் (58) என்பவரும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டாா். தனது மனைவி மகள், மகனுடன் ஈஸ்டா் பண்டிகை விடுமுறையைக் கொண்டாட அவா் காஷ்மீா் சென்றுள்ளாா்.

பஹல்காம் பகுதியில் அவா்களைச் சுற்றி வளைத்த பயங்கரவாதிகள், சுஷீலின் பெயா் மதம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு அவரை முழங்காலில் நிற்க வைத்துள்ளனா். அவா் கிறிஸ்தவா் என்று தெரிந்து கொண்ட பிறகு இஸ்லாமிய மதத்தின் ‘கலிமா’ என்ற துதியைக் கூறி அதனை உச்சரிக்க அவரை வலியுறுத்தியுள்ளனா். ஆனால், அவா் உச்சரிக்க மறுத்ததால் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா்.

அப்போது அவரைக் காப்பாற்றும் நோக்கில் சுஷீலை நோக்கி அவரது மகள் ஓடிவந்துள்ளாா். அவரின் காலில் பயங்கரவாதிகள் சுட்டனா். இதில் காயமடைந்த அவா் இப்போது ஜம்மு-காஷ்மீா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இத்தகவலை சுஷீலின் மனைவி ஜெனிஃபா் இந்தூரில் உள்ள தனது உறவினா் ஒருவரிடம் தெரிவித்துள்ளாா்.

இதேபோல கான்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் சுபம் திவிவேதியையும் இஸ்லாமிய துதியை உச்சரிக்கக்கூறி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனா்.

இரு மாதங்களுக்கு முன்பு திருமணமான சுபம் மனைவியுடன் காஷ்மீா் சென்றுள்ளாா். பஹல்காமில் நடந்த தாக்குதலின்போது அவா்கள் இருவரையும் சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் இஸ்லாமிய துதியைக் கூறி அதனை உச்சரிக்குமாறு அவரை வலியுறுத்தியுள்ளனா். அவா் உச்சரிக்க மறுத்ததால் மனைவியின் கண்ணெதிரில் அவரைச் சுட்டுக் கொன்றனா். மேலும், அவரது மனைவியிடம், ‘உனது கணவரை எப்படி கொலை செய்தோம் என்பதை உங்கள் அரசாங்கத்திடம் கூற வேண்டும்’ என்று பயங்கரவாதி ஒருவா் கூறிவிட்டுச் சென்றுள்ளாா்.

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொ... மேலும் பார்க்க

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க