செய்திகள் :

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

post image

நமது நிருபர்

ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலையடுத்து, இருநாடுகளில் இருந்தும் இந்தியர்களை மீட்க "ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையை கடந்த 19}ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியது. அதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த 23}ஆம் தேதி வரை ஈரானில் இருந்து 2,003 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், "ஈரானில் இருந்து மேலும் 573 இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 578 பேர் இரு சிறப்பு விமானங்களில் செவ்வாய்க்கிழமை புது தில்லி வந்தடைந்தனர். இதையடுத்து, ஈரானில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,576}ஆக உயர்ந்தது.

அதேபோல் இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் வழியாக முதல் விமானத்தில்161 இந்தியர்கள், இரண்டாவது விமானத்தில் 165 இந்தியர்கள் மற்றும் மூன்றாவது விமானத்தில் 268 இந்தியர்கள் என மொத்தம் 594 இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்தனர்.

இதன்மூலம் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மட்டும் 1,100 இந்தியர்களும் ஒட்டுமொத்தமாக 3,170 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர்' என குறிப்பிட்டார்.

வரவேற்பு: முன்னதாக, இஸ்ரேலிலிருந்து ஜோர்டான் வழியாக விமானப் படை விமானத்தில் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்திறங்கிய 165 பேரை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இதில், 11 பேர் தமிழக மாணவர்களாவர்.

இது குறித்து அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "இந்த மீட்பு நடவடிக்கை அரசுக்கும், வெளி விவகாரத் துறைக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என்றார் அவர்.

11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயம் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்... மேலும் பார்க்க

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாக... மேலும் பார்க்க

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒ... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமைய... மேலும் பார்க்க

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க