செய்திகள் :

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 'இன்னும் ஒரு போரா?' - கைவிரித்த அமெரிக்கா; என்ன நடக்கிறது?

post image

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது.

நேற்று இரவு, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய பின்னணி.

கடந்த சில நாள்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், ஈரானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

இந்த நிலையில், இஸ்ரேல் நேற்று ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கி உள்ளது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இயன் காட்ஸ் 'முன்னெச்சரிக்கைத் தாக்குதல்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் மக்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றும் கூறியுள்ளார்.

அதுவரை...

அடுத்ததாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "சில நொடிகளுக்கு முன்பு, 'ஆபரேஷன் ரைஸிங் லயன்' என்கிற ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இந்த அச்சுறுத்தல் அகலும் வரை, இந்த ஆபரேஷன் தொடரும்" என்று பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எங்களுக்குச் சம்பந்தமில்லை

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் மீது இஸ்ரேல் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் எங்களுக்கு (அமெரிக்கா) எந்த சம்பந்தமும் கிடையாது. இப்போது, அங்கே இருக்கும் அமெரிக்கப் படைகளைக் காப்பதே எங்களுடைய முன்னுரிமை.

இந்தத் தாக்குதல் தங்களின் தற்காப்பிற்கு மிகவும் முக்கியம் என்று இஸ்ரேல் எங்களிடம் தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அரசு நிர்வாகம் அங்கு இருக்கும் எங்களின் படையைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மார்கோ ரூபியோ
மார்கோ ரூபியோ

நான் ஒன்றைத் தெளிவாகக் கூறுகிறேன், ஈரான் அமெரிக்காவையும், அமெரிக்காவைச் சேர்ந்தவர்களையும் டார்கெட் செய்யக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தத் தாக்குதல் குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர் கூறுகையில்...

"ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இது ஈரானை அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடாமல் தடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையைத் தடுக்கும்.

ஏற்கனவே உலகில் ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் போய்க் கொண்டிருக்கும் வேளையில், இது இன்னொரு போராக உருமாறலாம்" என்று எச்சரிக்கின்றனர்.

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் உள்ளதா?

ஈரானிடம் இதுவரை அணு ஆயுதம் இல்லை. ஆனால், அணு ஆயுதம் கொண்டிருக்க வேண்டிய விதிமுறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எட்டி வருகிறது ஈரான்.

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருக்கிறது. ஆனால், அது குறித்து இஸ்ரேல் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்று சர்வதேச அளவிலான செய்திகள் கூறுகின்றன.

ஈரானின் இந்த நடவடிக்கையைத் தடுக்கவே, இஸ்ரேல் இந்தத் தாக்குதலைக் கையிலெடுத்துள்ளது. இதற்கு ஈரான் நிச்சயம் பதிலடி கொடுக்கும். இது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், சில பொருளாதாரப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

ஈரான்
ஈரான்
ஈரான்
ஈரான்
ஈரான்
ஈரான்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

36 words / 339 characters

Israel - Iran Conflict: பின்னணியில் America? | Ahmedabad Plane CrashTRUMP |Imperfect Show 14.6.2025

* இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல - பெஞ்சமின் நெதன்யாகு - வருண்* இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு - சிபி* உலக நாடுகளின் தலைவர்களுடன் நெதயான்கு பேச்சு? - சிபி* Israel V... மேலும் பார்க்க

திருச்சி: திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விசிக-வின் 'மதச்சார்பின்மையை காப்போம்' பேரணி‌ - Album

மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்பின்மையை காப்போம் பேரணி‌மதச்சார்... மேலும் பார்க்க

"காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் மக்களின் நிலை என்ன?" - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்த நபர்கள் காவல்நிலையத்திற்குள் புகுந்து வாக்குவாதம் செய்து பொருட்களை அடித்து நொறுக்கி பணியில் இருந்த ... மேலும் பார்க்க

Israel: 'இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்' - ஏன்?

இந்தியாவின் எல்லைகளைத் தவறாக காட்டியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல்கள் எழுந்துள்ளன. ஈரானின் அணு ஆயுத மையம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நாடந்திய ... மேலும் பார்க்க

'ஒரே பாடலில் முதலமைச்சர் ஆக முடியாது விஜய்!' - எச்சரிக்கும் மருது அழகுராஜ் | பேட்டி

நமது எம்.ஜி.ஆர், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ். விஜய்க்கும் தவெகவுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். விஜய்யின் கட்சியில் விரைவில் இணையப்போகிறார் என்றெல்லாம் ... மேலும் பார்க்க