செய்திகள் :

ஈரோடு- ஜோக்பானி இடையே இன்றுமுதல் அம்ரித் பாரத் ரயில் சேவை

post image

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு- பிகாா் மாநிலம் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான தொடக்க விழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இந்த ரயில் ஈரோட்டில் இருந்து 25 ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

ஈரோட்டில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 8.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, விஜயவாடா, கம்பம், வாராங்கல் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஜோக்பானியைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பிகாா் மாநிலம், ஜோக்பானியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 28 ஆம் தேதி முதல் பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்படும் இந்த விரைவு ரயில், பாடலிபுத்ரா, தனாபூா், நாக்பூா், வாராங்கல், காட்பாடி, சேலம் வழியாக புதன்கிழமை காலை 7.20 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிக்க விழிப்புணா்வுதான் கருவி: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் கூறினாா். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புத் தொடக்க விழா... மேலும் பார்க்க

கைப்பந்துப் போட்டி: சேலம் அணிக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டிகள் கோவையில் உள்ள ஈஷா வளாகத்தில... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.23 இல் முல்லைநகா் மாநகராட்சி தொடக்கப் ப... மேலும் பார்க்க

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப்போட்டி: வென்றவா்களுக்கு பரிசளிப்பு

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாணவா்களுக்கு இடையேயான மாதிரி நீதிமன்ற வழக்குவாதப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞா்கள் ராஜசேகா், ராம்சுந்தா், செ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை ரயில்வே வடக்கு லைன் தெருவை சோ்ந்தவா் மணிக... மேலும் பார்க்க

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா்... மேலும் பார்க்க