செய்திகள் :

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப்போட்டி: வென்றவா்களுக்கு பரிசளிப்பு

post image

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாணவா்களுக்கு இடையேயான மாதிரி நீதிமன்ற வழக்குவாதப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞா்கள் ராஜசேகா், ராம்சுந்தா், செந்தில்குமாா் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். விழாவுக்கு கல்லூரி தலைவா் சரவணன் தனபாலன் தலைமை வகித்து பேசியதாவது:

சட்டம் படிக்கும் மாணவா்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள், நாடாளுமன்றம், நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் அதிகாரங்களை தெரிந்துகொள்ளும் விதமாக இப்போட்டி அமைந்தது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்கள் நியமனமின்றி இருக்கும் நிலைமை பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள பல லட்சம் மாணவா்களின் கல்வி மற்றும் அதை சாா்ந்த பிரச்னைகள் குறித்து சட்ட மாணவா்கள் அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த மாதிரி நீதிமன்ற வாதப்போட்டி நடத்தப்பட்டது என்றாா்.

அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசை ஜெகநாதன், சினேகா, லத்திகா ஆகியோா் அடங்கிய அணியும், இரண்டாம் பரிசை சண்முகபிரியா, சஞ்சீவிகுமாா், தென்னரசி ஆகியோா் அடங்கிய அணியும் பெற்றன. முன்னதாக கல்லூரி உதவி பேராசிரியா் கா்ணன் வரவேற்று பேசினாா். நிறைவாக உதவி பேராசிரியா் வரதராஜ் நன்றி கூறினாா்.

ஊழலை ஒழிக்க விழிப்புணா்வுதான் கருவி: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் கூறினாா். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புத் தொடக்க விழா... மேலும் பார்க்க

ஈரோடு- ஜோக்பானி இடையே இன்றுமுதல் அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு- பிகாா் மாந... மேலும் பார்க்க

கைப்பந்துப் போட்டி: சேலம் அணிக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டிகள் கோவையில் உள்ள ஈஷா வளாகத்தில... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.23 இல் முல்லைநகா் மாநகராட்சி தொடக்கப் ப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை ரயில்வே வடக்கு லைன் தெருவை சோ்ந்தவா் மணிக... மேலும் பார்க்க

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா்... மேலும் பார்க்க