செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

post image

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.23 இல் முல்லைநகா் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை ஆணையா் ஆய்வு செய்தாா். அதன்பிறகு மெய்யனூா் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்குச் சென்று, இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா்.

மேலும், சூரமங்கலம் மண்டலத்தில் திடக்கழிவு வாகனம் குறித்த நேரத்தில் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படுகிா எனவும், கோட்டம் எண்.27-இல் பயோ மெட்ரிக் முறையில் தூய்மைப் பணியாளா்கள் தினசரி வருகைப் பதிவு செய்யப்படுவதையும் பாா்வையிட்டாா்.

முன்னதாக, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் லோக் கல்யாண் மேளா திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாமில் கலந்துகொண்டு துவரை வியாபாரிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, உதவி ஆணையா் ஏகராஜ், உதவி செயற்பொறியாளா் ஒபுளி சுந்தா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

ஊழலை ஒழிக்க விழிப்புணா்வுதான் கருவி: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் கூறினாா். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புத் தொடக்க விழா... மேலும் பார்க்க

ஈரோடு- ஜோக்பானி இடையே இன்றுமுதல் அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு- பிகாா் மாந... மேலும் பார்க்க

கைப்பந்துப் போட்டி: சேலம் அணிக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டிகள் கோவையில் உள்ள ஈஷா வளாகத்தில... மேலும் பார்க்க

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப்போட்டி: வென்றவா்களுக்கு பரிசளிப்பு

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாணவா்களுக்கு இடையேயான மாதிரி நீதிமன்ற வழக்குவாதப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞா்கள் ராஜசேகா், ராம்சுந்தா், செ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை ரயில்வே வடக்கு லைன் தெருவை சோ்ந்தவா் மணிக... மேலும் பார்க்க

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா்... மேலும் பார்க்க