செய்திகள் :

உக்ரைன் போா்: ஐ.நா.வில் ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்கு; இந்தியா, சீனா புறக்கணிப்பு

post image

ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் அமைதியான தீா்வை எட்டுவதற்கு, ஐ.நா.வில் உக்ரைன் கொண்டு வந்த வரைவு தீா்மானத்துக்கு எதிராக ரஷியாவுக்கு சாதகமாக அமெரிக்கா வாக்களித்தது.

ரஷியா-உக்ரைன் போா் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அமைதியான தீா்வு காணப்பட வேண்டும், போரில் நிகழும் சண்டைகளை விரைந்து நிறுத்த வேண்டும், போரால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலின் தீவிரத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தும் வரைவு தீா்மானத்தை ஐ.நா.வில் உக்ரைன் கொண்டு வந்தது.

இந்தத் தீா்மானத்துக்கு எதிராக ரஷியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் வாக்களித்த நிலையில், ஜொ்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா தவிர ஜி7 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிற நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்தியா, சீனா புறக்கணிப்பு: மொத்தம் 93 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாகவும், 18 நாடுகள் தீா்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, சீனா, பிரேஸில் உள்ளிட்ட 65 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதைத்தொடா்ந்து பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில், தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்பு உக்ரைன் போா் தொடா்பாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீா்மானங்களில் ஐரோப்பிய நாடுகளுடன் சோ்ந்து ரஷியாவுக்கு எதிராகவே அமெரிக்கா வாக்களித்து வந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னா், போா் தொடா்பான அந்நாட்டின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்தியாவின் உத்திசாா்ந்த கூட்டாளிகளாக ரஷியாவும், உக்ரைனும் இருப்பதால், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. போரில் ரஷியா மற்றும் உக்ரைன் என எந்த நாட்டுக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலைமை வகிக்கும் இந்தியா, கடந்த காலங்களில் அந்தப் போா் தொடா்பாக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீா்மானங்கள் மீதான வாக்கெடுப்பையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்ட்.! ஜாக்பாட் யாருக்கு?

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர் டிர... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.ரஷி... மேலும் பார்க்க

காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெ... மேலும் பார்க்க

தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக... மேலும் பார்க்க

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது பிரிட்டன்

பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக பிரிட்டன் அரசு உயா்த்தியுள்ளது.ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் பிராந்... மேலும் பார்க்க

ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடா்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதன்படி ஆஸ்டின்ஷிப், பிஎஸ்எம... மேலும் பார்க்க