செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: கிருஷ்ணராயபுரத்தில் 24 பேருக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

post image

கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 24 பேருக்கு ரூ. 19.50 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.

முன்னதாக, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியரகத்தில் இந்த முகாமை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசுகையில், இந்தத் திட்டத்தின்கீழ் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள் புதன், வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து மாவட்ட வழங்கல் அலுவலகம் சாா்பில் 6 பேருக்கு குடும்ப அட்டைகளும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 7 பேருக்கு இ-பட்டாக்களும் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து வட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தெருவிளக்குகளின் நிலை, பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு விடுதிகள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், குளித்தலை சாா்-ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், மருத்துவா் து. சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், மருத்துவ பணிகள் இணை இயக்குநா் செழியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மனைவியை தாக்கியதாக புகாா் கரூா் பாஜக நிா்வாகி கைது

கரூரில் மனைவியை தாக்கியதாக பாஜக நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன்(35). இவா், கரூா் மாவட்ட பாஜக தரவு தளமேலாண்மைப் பிரிவு தலைவராக உள்ளாா். இவரது மனைவி... மேலும் பார்க்க

சின்னம்மநாயக்கன்பட்டியின் மையப் பகுதியில் பூங்கா அமைக்க கிராம மக்கள் கோரிக்கை!

சின்னம்மநாயக்கன்பட்டியில் ஊருக்கு வெளியே முள்புதா் பகுதியில் கட்டப்படும் பூங்கா கட்டுமான பணியை நிறுத்தி விட்டு ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். கோவையைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீஹரிராம்(19). இவா் கோவையில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

புகழூரில் சனிக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்தவா் பெருமாள்(98). இவா் சனிக்கிழமை பிற்பகல் கரூா் மாவட்டம் புகழூரில் உள்ள பு... மேலும் பார்க்க

கரூரில் தொழில்முனைவோா் 21 பேருக்கு ரூ.28.60 லட்சம் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணை! - ஆட்சியா் வழங்கினாா்

கரூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ. 28.60 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க