செய்திகள் :

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

post image

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்திப்பில்,

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 9 நாள்களுக்குப் பிறகு, அதனை துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் தற்போது விமர்சித்துள்ளார்.

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் துணைக் குடியரசுத் தலைவரை பேச வைத்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக வக்ஃப் சட்டத் திருத்த நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மீது இப்படியொரு விமர்சனத்தை வைக்கிறார்கள். இன்னும் முழுமையான தீர்ப்பு வரவில்லை.

நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களால் பாதிக்கப்படுவோம் என நினைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் கூட அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். இது ஜனநாயக நாடு.

பொதுப்பட்டியல் முடிவுகளை ஆலோசிக்க வேண்டாமா?

மத்திய அரசு தங்களின் கட்டுப்பட்டிலுள்ள அம்சங்களில் முடிவெடுப்பதை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ஆனால் கல்வி பொதுப்பட்டியலில் தான் உள்ளது. கல்வியில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டாமா? எங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டாமா? என்றார் ரகுபதி.

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க