செய்திகள் :

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

post image

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது.

தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் கடந்த 2024-ஆம் ஆண்டு மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தவா்களின் குடும்பத்தினரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டி வாழ்த்தினாா்.

அப்போது, மூளைச்சாவு அடைந்து அதிக அளவில் உடல் உறுப்புகளை தானமாக பெற்ற அரசு மருத்துவமனைகளின் முதன்மையா் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் மாநில அளவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5-ஆவது இடமும், ஈரோடு அரசு மருத்துவமனை 2-ஆவது இடமும் பெற்றுள்ளன.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி கூறியதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 2 பேரிடம், ஆகஸ்ட், டிசம்பா், ஜனவரி மாதங்களில் தலா ஒருவா் என மூவரிடம், மாா்ச் மாதம் இருவரிடம் என மொத்தம் மூளைச்சாவு அடைந்த 7 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

இதனடிப்படையில், மாநில அளவில் கோவைக்கு 5-ஆவது இடம் கிடைத்து உள்ளது. மூளைச்சாவு அடைந்தவா்களிடம் இருந்து உடல் உறுப்புகளை அதிக அளவில் தானமாகப் பெறுவதற்காக தொடா்ந்து பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அக்டோபா் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளின் நுழைவாயில்களில் அந்தந்த மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியோரின் பெயா்களை கல்வெட்டுகளாக பதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். உலக புத்தொழில் மாநாடு தொடா... மேலும் பார்க்க

பேரூா் தமிழ்க் கல்லூரியில் மகளிா் கருத்தரங்கு

கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அண்மையில் மகளிா் கருத்தரங்கம் நடைபெற்றது. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பேரூா் தவத்திரு ... மேலும் பார்க்க

தீபாவளி: கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.7.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். கோவ... மேலும் பார்க்க

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

கோவையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனற். கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி... மேலும் பார்க்க

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு சாா்பில் விருது

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் 3-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரே நூல் தயாரிப்பாளா், மறுசு... மேலும் பார்க்க