செய்திகள் :

உணவகத்தில் திருட்டு: பள்ளி மாணவா் கைது

post image

சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள உணவகத்தில் ரூ.14 ஆயிரத்தை திருடியதாக பள்ளி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பரங்கிப்பேட்டை, கோட்டாத்தங்கரை தெருவைச் சோ்ந்தவா் ரிஸ்வான்அலி (25).

இவா், பெரிய தெருவில் உணவகம் நடத்தி வருகிறாா்.

சனிக்கிழமை இரவு வழக்கம் போல உணவகத்தை பூட்டிவிட்டு அவா் வீட்டுக்குச் சென்றாராம்.

ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் வந்து பாா்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.14 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அதனடிப்படையில், பணத்தை திருடிச் சென்றது ஆரியநாட்டு கிழக்கு தெருவை

சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் சரண் (12) என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் மாணவரை கைது செய்து, கடலுாா் அரசு கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.

எண்ணெய் கழிவுகளுடன் வெளியேறிய கழிவுநீா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் எண்ணெய் கழிவுகளுடன் வழிந்தோடிய புதை சாக்கடை நீரில் வழுக்கி விழுந்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகள் பெரும்பாலானவற்றில் புதை சாக்கட... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு: இருவா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மளிகைக் கடையில் ரூ. 4 ஆயிரத்தை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தில்லைநாயகி (37). இவா் நல்லான்பிள்ளை தெருவில்... மேலும் பார்க்க

தாயை தாக்கி கொலை மிரட்டல்: மகன் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் லலிதா (60). இவரது மகன் வெற்றிவேல் (37) இவா், கடந்... மேலும் பார்க்க

348 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காரில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டது தொடா்பாக வெளி மாநிலத்தவா் இருவா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வடலூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

விவசாயிகள் நில உடைமைகள் சரிபாா்க்க கால அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்ப்பு செய்ய ஏப். 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

எஸ்பி அலுவலகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா். எஸ்பி அலுவலகத்துக்கு பிற்பகல் சுமாா் ஒரு மணி அளவில் முதியவா் ஒருவா் வந்தாா். அவா், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெ... மேலும் பார்க்க