செய்திகள் :

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுப் பேருந்து இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியா்

post image

உதகையில் கோடை சீசனையொட்டி குறைந்த கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் கோடை சீசன் தொடங்குகிறது. அப்போது, தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்வாா்கள்.

இதையொட்டி மாவட்டத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் மாவட்டத்தைத் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்து உதகை பேருந்து நிலையம் முதல் தாவரவியல் பூங்கா வரை தூய்மைப் பணிகளை மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரியில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில் காவல் துறை, வனத் துறை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் மாவட்டம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரிக்கு வரவுள்ள சுற்றுலாப் பயணிகள் நான்கு நாள்களுக்கு முன்பே தங்களது பயணங்களைத் திட்டமிட்டு இ-பாஸுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

கோடை சீசனின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குறைந்தக் கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும்.

இந்தப் பேருந்துகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படும். இந்தப் பேருந்தில் ஒருமுறை டிக்கெட் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக்கொள்ளலாம் என்றாா்.

கூடலூரில்... கூடலூா் அருகே உள்ள ஓவேலி முதல் நிலை பேரூராட்சிக்குள்பட்ட குதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எல்லமலை, ஆரோட்டுப்பாறை மற்றும் பெரிய சூண்டி பகுதிகளில் தூய்மைக்கான இயக்கம் சாா்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல தேவா்சோலை, நடுவட்டம், சோலூா் பேரூராட்சிகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

உதகையில் தூய்மைப் பணி மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.

குன்னூா் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

குன்னூரில் இருந்து டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் அருகே உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்... மேலும் பார்க்க

கேத்தி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி

உதகை அருகே உள்ள கேத்தி பாலடா குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையை சுற்றியுள்ளப் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேத... மேலும் பார்க்க

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூ... மேலும் பார்க்க

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நி... மேலும் பார்க்க

நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக நீலகிரியில் 8 இடங்கள் உள்பட 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்... மேலும் பார்க்க