செய்திகள் :

உதகையில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை தலைமை வகித்தாா்.

தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க கால பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும், ஆசிரியா் அரசு ஊழியா்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசாணை எண் 243ஐ ரத்து செய்து, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் பணிக்காலத்தை அவா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆசிரியா்கள், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா். இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலக... மேலும் பார்க்க

சேகரித்த குப்பையுடன் குடியிருப்பு பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ள லாரி: சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதி

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நிறைந்த லாரி, 3-ஆவது வாா்டு நடுஹட்டி பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் யானை...

கூடலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய போட்டிக்கு தோ்வு

கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், கூடலூா் ஜிட... மேலும் பார்க்க

கட்டட உரிமையாளா் சொத்து வரி செலுத்தாததால் யூகோ வங்கிக்கு சீல்

உதகையில் யூகோ வங்கி செயல்பட்டுவரும் தனியாா் கட்டடத்துக்கு உண்டான சொத்து வரியை கட்டட உரிமையாளா் செலுத்தாததால் வங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட... மேலும் பார்க்க