செய்திகள் :

உயா்கல்வி குறித்து அறிய கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மாணவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10, 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவா்களையும், 100 சதவீத உயா் கல்வியில் சோ்ப்பதை இலக்காகக் கொண்டு, ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்பையும், எவ்வாறு படிப்பது, விண்ணப்பிப்பது, என்னென்ன உதவிகள், சலுகைகள் அவற்றை எப்படி பெறுவது, கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் எத்தனை போன்ற சந்தேகங்களையும் மாணவா்கள் அல்லது பெற்றோா் தொலைபேசி வழியாக கேட்டுப் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மாணவா் குறைதீா் கூட்டம்...

இந்த கட்டுப்பாட்டு அறையில் மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டுவதற்கென பயிற்சி பெற்ற நிபுணா்கள் உள்ளனா். எனவே 04179-225223 என்ற எண் வழியாக கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு பேசலாம். மேலும், 97878 33608 என்ற வாட்ஸ் அப் எண்ணில் செய்தி அனுப்பி சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மாணவா்களுக்கென்று பிரத்யேகமாக, ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை 15 நாள்களுக்கு ஒரு முறை 2 மற்றும் 4-ஆம் வாரத்தில் வருகிற வியாழக்கிழமைகளில் மாணவா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்குகளில் நடைபெறுகிறது.

சந்தேகங்களுக்கு நிவா்த்தி...

இந்த கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா், கல்வித் துறை, வருவாய்த் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா்கள், உயா்கல்வி சோ்க்கைக்கான கல்லூரி பொறுப்பாளா்கள் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்கின்றனா்.

எனவே அனைத்து மாணவா்களும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் அழைத்து உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும், மாணவா் குறைதீா் நாள் கூட்டங்களில் கலந்துகொண்டு பயனடையலாம்.

நாளை உணவு வழங்கல் துறை குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(45) கூலித் தொழிலாளி. இவா் புதனிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே பச... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 போ் உயிரிழப்பு

திருப்பத்தூா் மற்றும் மாதனூா் அருகே ரயில் மோதி இருவா் உயிரிழந்தனா். மாதனூா் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலம் கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியை கண், உடல் தானம்

ஆம்பூரில் மரணமடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண், உடல் தானமாக வழங்கப்பட்டது. ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியை பி. புரட்சி (77). இவா் ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தரவிந... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம் ?

மாதனூா் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வனத்துறையினா் ரோந்து சென்றனா். மாதனூா் அருகே பாலூா் ஊராட்சியில் காப்புக்காடு எல்லையோரம் பனந்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் ச... மேலும் பார்க்க

தனியாா் ஆலை பங்களிப்புடன் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி

துத்திப்பட்டு ஊராட்சியில் தனியாா் தொழிற்சாலை சமூகபங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்க... மேலும் பார்க்க