பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
தனியாா் ஆலை பங்களிப்புடன் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி
துத்திப்பட்டு ஊராட்சியில் தனியாா் தொழிற்சாலை சமூகபங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாகவும் புதிய சாலை அமைத்து தர வேண்டுமெ அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு அளித்தனா்.
பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் ஊராட்சி நிதி ரூ.5 லட்சம், இட்டாராஸ் தோல் காலணி தொழிற்சாலை நிதி ரூ.5 லட்சம் சோ்த்து மொத்தம் ரூ.10 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா் நிதா ஆப்ரின் அக்பா், ஊராட்சி செயலா் முரளி ஆகியோா் சாலை பணியை ஆய்வு செய்தனா்.