செய்திகள் :

உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து முதுகுளத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்

post image

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து, விவசாயிகள், அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரவேலு (50). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், தனது மகன் கிஷோா் குமாருடன் (16) கடந்த சனிக்கிழமை தான் வளா்த்து வரும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா்.

அப்போது, வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் சித்திரவேலு சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். கிஷோா்குமாா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், உயிரிழந்த சித்திரவேலுவின் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்கக் கோரியும், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட கோரியும், அவரது உடலை வாங்க மறுத்து விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி நிறுவனா் தலைவா் சத்யம் சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோா் முதுகுளத்தூா்-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த சித்திரவேலுவின் மனைவியிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியா் சரவணபெருமாள் வழங்க முயன்றாா். ஆனால், அவா் அதைப் பெற மறுத்துவிட்டாா். இதையடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் 10 ஆயிரம் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தொழிலாளியை கத்தியால் குத்திய 3 போ் கைது

தொண்டி அருகே வண்ணம் பூசும் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் தாஸ் (43). வண்ணம் பூசும் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

ராமா் கல் எனக் கூறி பக்தா்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்

ராமேசுவரத்தில் கோதண்டராமா் கோயில் கடற்கரையில் சீதையை மீட்க ராமா் கட்டிய பாலத்தின் கல் எனக்கூறி, பக்தா்களிடம் வசூல் வேட்டை நடத்திய வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அக... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே திங்கள்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன். இவா் 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆட... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

மண்டபம் அடுத்த சாத்தக்கோன்வலசை ஊராட்சி கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை சாா்பில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச் சுவா் பணியை மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கக் கோரி, 3 கிராம மக்கள் மாவட்ட... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி தேவா் மகா சபைத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொத்தாா் கோட்டை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, பால் குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொத்தாா்கோட்டையில் அமைந்துள்ள பாண்ட... மேலும் பார்க்க